Breaking News
Loading...
Saturday, March 8, 2014

ஆர்கனான் - 4

Saturday, March 08, 2014


ஒரு நோய் ஏற்பட்டு அதன் (இயற்கை) பலத்தால் உடல் துன்பப்படும்போது அதைவிட அதிக பலத்துடன் (செயற்கை) மருந்தை நாம் தரும் போது அது இயற்கையின் பலத்தை (நோயை) வென்றுவிடுகிறது. மருந்தின் பலம் அதிகம் என்பதால் (இயற்கை) நோயின் பலத்தைவிட அதிக பலமாக உடலை தாக்குகிறது. மருந்து செயற்கை, ஆனால் பலம் அதிகம். சிறிது நேரம் மட்டுமே உடலில் இருக்கும். அதை மருந்தின் வேகம் (AGG.,). பின்பு அது பூமி ஓடுகிற வேகத்தில் பலம் குறைந்து அது அழிந்துவிடும். பின்பு உடம்பு தூய்மையாகி விடும். 
அக்குபிரஸர்: 
அக்குபங்சர் நரம்பு தடையை நீக்கும் முறை மெஸ்மெரிஸம், ஹிப்னாடிசம் போன்ற பல துறை மருத்துவம் உள்ளது. குறிப்பாக அக்குபிரஸர் வர்ம கலை உள்ளது. அதில் குறிப்பிட்ட பாயிண்டில் பிரஸர் கொடுப்பதால் உடனே வலிகளோ, பிற தொல்லைகளோ மாயமாய் மறைந்து விடுகிறது. காரணம் மருத்துவரின் உயிர் ஆற்றலும் வான்காந்த தொடர்பும் சேர்ந்து நோயாளி உடலில் உள்ள உயிர்பு சக்தி Vital Force தூண்டப்பட்டு சிறிது நேரம் மட்டும் பலன் அளிக்கிறது பிறகு அது நிரந்தரமா? ஹோமியோபதியில் ஆன்மா, உயிரில் தங்கி உள்ள (மியாசமே) குறியாக காட்டுகிறது. அந்த குறியை வேறொரு வெட்டத்தக்க ஹோமியோபதி மருந்து தரும்போது என்ன நடக்கிறது.

உதாரணம் 

ஒரு முரடன் தீங்கு செய்கிறான். அதை விட பலம் வாய்ந்தவர் போலிஸ் அவர் முரடனை சுட்டு வீழ்த்துகிறார். பின்பு அமைதி. இதே இடத்தில் நமக்கு சந்தேகம் வரலாம் நோய் போகலையே என்று. ஆனால் முன்பு வந்த குறி இப்போது இல்லை. இது வேறு அதை தக்க மருந்து தந்து போக்கி கொண்டே வர வேண்டும். எவ்வளவு நாள் ஆகும் என்று நோயாளி கேட்கலாம். உண்மை என்னவென்றால் மியாசத்தின் கணம் இருக்கும் வரை தக்க குறிகளாக வரிசையாக அது வெளியே வரும். அப்போது குறிக்கு தக்க மருந்தை தரம். எவ்வளவு நாள் ஆகும் என்று கணக்கிட முடியாது. காரணம் ஒரு மனிதருக்கு மனிதர் பல ஆயிரம் மடங்கு வித்தியாசமாக இருக்கிறார்கள். 

இதே இடத்தில்
வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் போது மனிதன் இந்த பிறவியில் மட்டும் அல்ல தாய், தந்தை, தாத்தா, பாட்டி என்று பல நூறு முன் தலைமுறையினர் செய்த பாவமும் அவனுக்குள் இருக்கிறது என்கிறார். பாவப்பதிவு என்று மகரிஷி கூறுவதும், மியாசம் என்று ஹானிமேன் கூறுவதும் ஒரே பொருள் தான் சிந்தித்து முடிவு செய்யவும்.

(30). இயற்கை நோய்களை விட மருந்துகளே மனித உடலின்ஆரோக்கியத்தை கெடுக்கிறது என்று மருந்து நிரூபணத்தின் போது தெரிகிறது. ஏனெனில் இயற்கை நோய்கள் மருந்துகளால் குணம் செய்யப்படுகிறது. மற்றும் மருந்துகளின் அளவை கூட்டுவதும் குறைப்பதும் நம் கையில் இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணம். பரவாயில்லை. அதனால் நாம் தப்பித்தோம். நோயின் தாக்குதல் சூழ்நிலையை பொருத்தே.

(31). மனதையும் உடலையும் தாக்கக்கூடிய நோய்ப்பொருட்கள் என்று அழைக்கப்படும் தீயசக்திக்ள் எப்பொழுதும் நம்மைச் சூழ்ந்து கொண்டே இருக்கின்றன. மேலும் இந்த பிரபஞசம் முழுவதும் சூழ்ந்திருக்கின்றன. ஆயினும் தகுந்த சூழ்நிலை இல்லாமல் (காரணங்கள்) அவை தாக்கி உடலின் ஆரோக்கியத்தை கெடுப்பதில்லை. நமது உடலின் வலிமை குறைந்து பலஹினம் ஏற்படும் போதும், தீயச்சக்தியை (மியாசம்) ஏற்றுக் கொள்ளும் உடல்வாகும் மனமும் உள்ள போதும் தான் நோய்பொருள்கள் உடலை அடைந்து ஆரோக்கியத்தை கெடுக்கின்றன. இதுவே இயற்கையின் நியதியாகும். வரையறையில்லாத மருந்தின் தாக்குதல்.

(32). மருந்துகள் என்று நாம் அழைப்பவை எது என்றால்? அதாவது செயற்கையாக நோய் குறிகளை உண்டாக்கும் தன்மையைதான் மருந்து என்கிறோம். உண்மையான மருந்துகள் ஒவ்வொன்றும் எல்லா சமயங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் உயிருள்ள எல்லா மனிதர்களிடமும் தவறாமல் வேலை செய்து மனித உடலில் தனக்கே உரியதான செயற்கை நோய்குறிகளைத் தோற்றுவிக்கிறது. மருந்தின் அளவு அதிகமாய் இருந்தால் நோய்குறிகளும் அதற்கு ஏற்ப அதிகத் தெளிவான முறையில் காட்சி அளிக்கும் இயற்கை நோய்களுக்கு இத்தகைய இயல்பு இல்லை. இதுவே இறைவனின் எல்லையற்ற கருணை தானே. (மருந்து நிரூபணம்).

குறிப்பு:

வேதாத்திரி மகரிஷி 
“இன்ப ஊற்றாய் விளங்கும் இறைவா 
எங்கும் எதிலும் அன்பு ஊற்றாய் விளங்கும் இறைவா” என்கிறார்.

வள்ளலாரும் “அருட்பெருஞ்ஜோதி உன் கருணைக்கு உதாரணம் காட்ட முடியாது” என்று உள்ளம் உருகி அருட்பாவில் பல பாடல்களை பாடியிருக்கிறார்.

(33). மேலேயுள்ள உண்மைக்கு இணங்க உயிருள்ள மனித உடல் இயற்கை நோய்ப்பொருள்களை விட மருந்து பொருள்களால் தான் அதிகமான அளவிலும் மிக எளிதிலும் தாக்கப்படுகிறது, என்பதை எல்லா அனுபவங்களும் மறுக்க முடியாத முறையில் மெய்ப்பிக்கின்றன. வேறு விதமாக சொல்ல வேண்டுமானால் இயற்கை நோய் பொருட்கள் ஏதோ ஒருவித கட்டுபாட்டுக்கு அடங்கியே நடந்து கொண்டு உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. மருந்து பொருள்களோ எவ்வித கட்டுபாடும் இல்லாமல் எல்லா சமயங்களிலும் சூழ்நிலைகளிலும் உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடிய அளவிட முடியாத வல்லமையுடையதாய் இருக்கின்றன.

குறிப்பு:

ஆகவே நோய் குறிகளை நீக்கும் போது (பொடன்சி) வீரியம் பொருத்தமானதாக தேர்வு செய்ய வேண்டும் அதிக வீரியம் அதிக நேரம் உடலை நாசம் செய்து விடும் (Agg.,) நோய்களை விட மருந்து செய்யும் தீமை அதிகமாகி விடும். ஒற்றுமை இல்லையேல் ஒன்றும் பயன் இல்லை.

(34). அதிக பலம் வாய்ந்த செயற்கை நோய்களை உண்டாக்கும் வல்லமை பெற்றுள்ளன என்ற ஒரே காரணத்தால் தான், மருந்துகள் இயற்கையான நோயை நீக்குகிறது என்று எண்ண கூடாது. அத்துடன் இயற்கை நோய் குறிகளுடன் மிக நெருங்கிய நோய் குறிகளை உண்டாக்கும் வல்லமையும் மருந்துகளுக்கு இருக்கவேண்டும். அப்பொழுது தான் இயற்கை நோயினால் உயிர்பு சக்தியில் ஏற்படுத்தப்படும் எல்லாப்பிடிப்புகளையும், தொடர்புகளையும் அறுத்தெறிந்து குணம் செய்ய அவைகளால் முடியும். முதலில் தோன்றிய ஓர் இயற்கை நோயை, அதற்கடுத்ததாக வரும் மற்றொரு இயற்கை நோயினால், இரண்டாவது நோய், முதல் நோயை விட எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தாலும், ஒற்றுமை இல்லாது போனால் நீக்க முடியாது என்பதை நாம் காண்கிறோம். அதைப்போலவே இயற்கை நோய் குறிகளுடன் ஒற்றுமை உள்ள செயற்கை நோய்குறிகளை உண்டாக்க முடியாத மருந்து எவ்வளவு பலம் பொருந்தியிருந்தாலும் இயற்கையான நோயை நீக்குவது இல்லை என்பதை அனுபவ வாயிலான உண்மையே.

குறிப்பு:

ஆகவே குறிக்கு தக்க மருந்துதான் முக்கியம். குறி மாறினால் மருந்து வேலை செய்யாது.

(35). முதலாவதாக வேற்றுமைக் குறிகளிலுள்ள இரு இயற்கை நோய்கள் ஒருவர் உடலில் சந்திக்கும் போதும், இயற்கை நோய்க்குறிகளுடன் ஒற்றுமையில்லாத அலோபதி மருந்துகளை கொடுத்து சிகிச்சை செய்யும் போதும் என்ன நேருகிறது என்பதை கவனிப்போம்.

(36). சந்திக்கும் நோய்கள் இரண்டும் சம பலம் உள்ளவைகளாய், அல்லது புதிய நோயை விடப் பழைய நோய் அதிக வலிமை வாய்ந்ததாய் இருந்தால் பழைய நோய் புதிய நோயை உடலிலே தங்க இடம் கொடுக்காமல் விரட்டி விடுகிறது. கடுமையான நீடிக்கும் நோயுள்ள ஒருவருக்கு இலையுதிர் காலங்களில் தோன்றும் வயிற்றுக் கடுப்போ அல்லது பெரிவாரியாக தோன்றும் இயல்புள்ள மற்ற நோய்களோ ஏற்படுவது கிடையாது. ஸ்கர்வி(Scurvy) உள்ளவர்களை பிளேக்கு(Plauge) தாக்குவதில்லை என்று லாரி (Dr.Larry) என்பவர் கூறுகிறார். அதே போல கரப்பான் படை உள்ளவர்களையும் பிளேக் தொற்றுவதுக் கிடையாது. ராகிடிஸ் (Rahitis) (நாய்கடி விமூம்) உள்ளவர்களின் உடலில் பெரியம்மை தடுப்பு மருந்தைக் குத்திச் செலுத்தினால் அம்மருந்து வேலை செய்வதில்லை என்று Dr..ஜென்னனர் கண்டுபிடித்திருக்கிறார். நுரையீரல் காச நோய் (T.B.) உள்ளவர்களை பெருவாரிச் ஜுரங்கள் (அவை அதிக கடுமையானதாக இல்லாவிட்டால்) தாக்குவது இல்லை என்று வானஹில்டன்ப்ரான்ட்(Van Hilden Brand) எழுதியுள்ளார். குறிப்பு: அளவிலும், தரத்திலும் குறைவாக உள்ள உணவை உட்கொள்வதால் உடலின் மேற்புறத்தில் திட்டு திட்டாக இரத்தம் குழம்பி நிற்கும் நிலைக்கு பெயர் தான் “ஸ்கர்வி”. குழந்தைப் பருவத்தில் தோன்றும் கோளாறான, எலும்பு வளர்ச்சியின்மை, கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகள் சரியாக வேலை செய்யாமல் இருப்பதுமான நோய். உயிரூட்டி D (Vitamin –D) குறைவினால் தோன்றுவதாகக் கருதப்படுகிறது. ரிக்கட்ஸ் (Rickets) என்ற மற்றொரு பெயரும் உண்டு.

(37). பிடிவாத குணமும், பல வருடங்களாய் நீடித்துள்ள ஓர் இயற்கை நோய்க்கு அலோபதி முறையில் சிகிச்சை செய்தால், அதாவது அந்நோயுடன் ஒற்றுமை இல்லாத மருந்துகளை கொடுத்தால், எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் நோய் நீங்காது. இவ்விசயத்தை ஒவ்வொரு நாளும் நம் தொழிலில் கண்கூடாக காண்கிறோம்.ஆதலால் வேறு உதாரணங்கள் கூற தேவையில்லை.

(38). இரண்டாவதாக பழைய இயற்கை நோயை விட புதியதாக வரும் ஒற்றுமையில்லாத இயற்கை நோய் அதிக பலம் பொருந்தியதாக இருந்தால் என்ன நேரும் என்பதை பார்ப்போம். பழைய நோய் பலஹீனமாய் இருப்பதால் புதிய நோய் ஏற்பட்டவுடன் அது பின்னுக்கு தள்ளப்பட்டு அது செயலற்றதாக்கிவிடுகிறது. புதிய நோய் குணமான உடன் அல்லது அதன் ஆட்டம் அடங்கியவுடன் பழைய நோய் தலையை தூக்குகிறது. இதை விளக்கப் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. கை, கால் வலிப்புள்ள இரு குழந்தைகளுக்கு தலையில் கரப்பான் படை வந்தவுடன் வலிப்பு வருவது நின்று விட்டது. ஆனால் கரப்பான் படை குணம் ஆனவுடன் பழைய படி வலிப்புகள்வர ஆரம்பித்துவிட்டன. சொறி சிரங்குகள் இருந்தவர்க்கு எலும்புறுக்கி (ஸ்கர்வி) என்னும் நோய் ஏற்பட்டு இது குணமானவுடன் மீண்டும் சருமத்தொல்லைகள் தோன்றின. மூச்சு மண்டல காச நோய் இருந்த ஒருவருக்குக் கடுமையான பெருவாரிச் ஜூரம(காய்ச்சல்) தோன்றிது. அந்த ஜூரம் இருந்த வரையில் காசநோய் கட்டி போடப்பட்டது போல் அடங்கியிருந்து. பிறகு அது சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது. காசம் (அ) T.B. நோய் உள்ளவர்க்கு பைத்தியம் பிடித்தால், பைத்தியம் சரியாகும் வரை T.B. உள்ளே மறைந்திருந்து பின் மறுபடியும் தோன்றி மிகக் கடுமையாகி இறுதியில் மரணத்தில்கூட முடியும். சின்னம்மை பெரியம்மையும் சேர்ந்தாற் போல் தோன்றும் காலங்களில், ஒரு குழந்தைக்கு முதலில் சின்னம்மையும் பிறகு பெரியம்மையும் கண்டால் சின்னம்மை அடங்கி போய் பெரியம்மை குணமான பிறகே வெளிவருகிறது. பெரியம்மை தடுப்பு மருந்தை ஒருவர் உடலில் குத்திய பிறகு ஒருவருக்கு சின்னம்மை தோன்றினால் மருந்து குத்தப்பட்ட இடம் வீக்கம், வேக்காடு ஆகிய குறிகள் ஏற்பட்டிருந்தாலும், அவை அப்படியே அமுக்கப்படுகின்றன அல்லது அதிகமாகாமல் அப்படியே நிற்கின்றன. சின்னம்மை முற்றிலும் குணமடைந்து தோலுறிய ஆரம்பித்தவுடன் மருந்து குத்தப்பட்ட இடத்தில் பூரிப்பு ஏற்படும். தாடை வீக்கம் (தாளம்மை Mumps) இருந்த ஒருவருக்கு பெரியம்மைத் தடுப்பு மருந்து உடலில் குத்தி, அது பூரிக்க ஆரம்பித்தவுடன் தாடை வீக்கம் மறைந்து விட்டது. அம்மை குத்தப்பட்ட இடம் தழும்பிட்டு ஆறிய பிறகே தாடை வீக்கம் தோன்றி அதன் கெடுவுக்காலமாகிய ஏழு நாட்களுக்கு நீடித்திருந்து குணமடைந்தது. வேற்றுமை குறிகளிலுள்ள நோய்கள் அனைத்திலும் நடப்பது இதுவே. அதாவது பலமுள்ள நோய் பலமற்றதை அடக்கத்தான் செய்கிறது. குணம் செய்வது கிடையாது. தீடீர் வகை (Acute) இரு நோய்கள் சந்திக்கும் போது பல சமயங்களில் ஒன்றோடு ஒன்று கலந்து கொண்டு சிக்கலான நிலைமையை உண்டு பண்ணும் நிலைமையும் ஏற்படுவதுண்டு.

குறிப்பு: 

(அலோபதி மருந்துகள் தக்க வியாதிக்கு கொடுத்தால் அடக்கத்தான் செய்யும். பின்பு அதே நோய் அல்லது வேறு பெரிய நோயாக வரும். கேட்டால் பக்க விளைவு வரும் என்பார்கள். (பக்க விளைவு என்பது அடக்கியதால் ஏற்படுவது.)

(39). இவ்விசயங்கள் அனைத்தையும் அலோபதியர்கள் அநேக நூற்றாண்டுகளாகப் பார்த்து இருக்கின்றனர். (ஏற்கனவே உடலின் உள்ள ஓர் இயற்கை நோயை ஒற்றுமையில்லாத மற்றோர் இயற்கை நோய் (இந்த புதிய நோய்) எவ்வளவு பலம் பொருந்தியதாய் இருந்தாலும் நீக்க முடியாது.) என்பதையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள் இருந்த போதிலும் நீடித்த வகை நோய்களுக்கு அலோபதி மருந்துகளை கொண்டே சிகிச்சை செய்து வருகின்றனர். அம்மருந்துகள் எவ்வித செயற்கை நோய்களை உண்டாக்கும் என்று ஆண்டவனுக்கு தான் தெரியும். ஆயினும் ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது அம்மருந்துகள் இயற்கை நோயுடன் முற்றிலும் வேற்றுமையாகவேயிருக்கும். இயற்கையாக நடைபெறும் காரியங்களை கூர்ந்து கவனிக்க முடியாமல் போனாலும், செய்த சிகிச்சையால் நேரிட்ட கேடுகளைப் பார்த்த பிறகாவது தாம் சென்ற வழி தவறானது என்று அலோபதி வைத்தியர்கள் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். (ஆங்கில டாக்டர்கள் ஏன் கற்றுக் கொள்ளவில்லை?)
Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer