Breaking News
Loading...
Thursday, January 28, 2016

பஞ்ச பட்சி - 1

Thursday, January 28, 2016

ஜோதிடமும் ஆன்மீகமும் -தொடர் - 6

தமிழ்க் கடவுளாகிய சுப்பிரமணியர் சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகிய மகாசக்தியால் சுப்பிரமணியருக்கு உபதேசித்த உன்னத கலையாகும் “பஞ்ச பட்சி சாஸ்திரம்” இதனையே சூரனை வதம்செய்ய முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.
சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனி யாகிய அகத்திய முனிவருக்கு முருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.
அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும்.

நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் – 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.

பஞ்சபூதம் எனப்படும் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும்

வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.

சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதே
பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே

என்பது பெரியோர் வாக்குவாகும்.

மேற்கண்டபடி பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும் வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான்.இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம் அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.

இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை,சிலம்பம் ,பிரச்சனை வழக்குகள்,போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர்.

அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரை வாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை எளிதில் அடைய வைக்க முடியும்.

மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான்,அவனை எவரும் வெல்ல முடியாது என்பது அறுதியிட்ட உண்மையாகும்.

இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம்,செய்தொழில்,காரியங்கள்,வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.

மேலும்
நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு.

நாள் ,திதி ,நட்சத்திரம் ,யோகம் ,கரணம் ,நேரம் ,லக்கினம் ,போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.

இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.

உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும்.அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும்.அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ,அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும்.

எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச்செய்யலாம்.

சித்தர்கள் இயற்றிய பஞ்சபட்சி சாஸ்திரம் பற்றிய நூல்கள் அனைத்தும் பூட்டு மட்டுமே,இவற்றின் “திறவுகோல்”ஒரு சில ஆசான்களிடம் மட்டுமே உள்ளது.

மேலும் இதன் வெளிவராத பல உண்மை இரகசியங்கள் தகுந்த குருவினால் பயிற்றுவிக்கப் படுகின்றது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

1 -இன்றைய நடைமுறையில் உள்ள பஞ்சபட்சி சாஸ்த்திர நூல்கள் அனைத்தும் ஒரு மூலநூலைப் பார்த்து பிரதி எடுக்கப் பட்டவை என்ற உண்மை விளக்கம்.

2 -“பஞ்சபட்சி வசிய சித்தி” முறை இரகசியம்.இதனை சித்தி செய்தால் மட்டுமே பஞ்சபட்சி எனப்படும் இந்த பஞ்சபூத சாஸ்த்திரம் நமக்கு கட்டுப் பட்டு பூரணமாக வேலை செய்யும்.

3 -“நங்கிலி” என்னும் மூலிகையின் உண்மை இரகசியம். 

4 -“பஞ்சபட்சி திறவுகோல் இரகசியம்” இந்த இரகசியத் திறவு கோல் மூலமாகத்தான் சித்தர்கள் பஞ்சபட்சி சாஸ்த்திரத்தின் 
அந்தர நாழிகை,
ஜாமம் கணக்கிடும் முறை,
எதிரி பட்சியை கணிப்பது, 
படுபட்சி அறிவது,
வளர்பிறையில்,தேய்பிறையில் பட்சிகள் ஜாமம் மாறும் இரகசியம், 
போன்றவை களை கணித்தார்கள்.இந்த திறவுகோல் இதுவரை எந்த ஒரு சித்தர் நூலிலும் மற்றும் ஓலைச்சுவடி களிலும் பதிவு செய்யப்பட வில்லை.

சித்தர் குருகுல பாரம்பரிய முறையில் நேரடி உபதேசமாக மட்டுமே கொடுக்கப்பட்டு வரப்படுகின்றது.

5 – “சிதம்பர இரகசியம்” என்னும் பஞ்சாட்சர மாறல் இரகசிய பிரயோக முறை விளக்கங்கள்.

6 -பஞ்ச பட்சி சாஸ்த்திர முறையில் அஷ்ட கர்ம பிரயோக முறை இரகசிய விளக்கங்கள்.வசியம்,மோகனம்,தம்பனம், ஆகர்ஷணம்,வித்துவேசனம், போன்றவைகளை அனுபவ முறையில் பிரயோகிக்கும் வழி முறைகள்.
“குருவும் தாரமும் வாய்ப்பது இறைவன் செயல்” என்பதற்கிணங்க சித்தர் கலைகளில் உள்ள சூட்சும இரகசியங்களை கற்பிக்கும் குரு கிடைக்க இறைவனின் பேரருள் வேண்டும்.

ஜோதிடத்தில் பஞ்ச பட்சி சாஸ்திரம் உள்ளது. 
காக புஜண்டர் போன்ற சித்தர்களும் பஞ்ச பட்சி சாத்திரம் பற்றி எழுதி உள்ளனர்.

பட்சி பறப்பது போல நம்முடைய எண்ண அலைகள் பறந்து சென்று , உணர்வுகளைத் தூண்டும் காரணத்தால், பட்சி என்று வைத்தார்கள்.

குறிப்பாக சொல்வதென்றால் – மரமோ – மிருகமோ – தலமோ அல்ல!

அரசாட்சி , சாவு (அ) மரணம் , துயில் , ஊண், நடை என்று பெயர் வைத்தனர்.

அரசாட்சி என்பது நடைமுறையில் செயல்படுதல்.

உ-ம் : தூங்குதல் , சாப்பிடுதல்.
துயில் – அரூப சக்தி – உயிர் உண்டு உடல் இல்லை ; ஒன்று மற்றொன்றுடன் ஐக்கியமாகுதல்.
ஊண் – பரிணாம வளர்ச்சி மற்றும் உருவ மாற்றங்கள்.
நடை – வளர்ச்சியின் ஆரம்பம் நடைமுறையில் ஏற்படும் சூழ் நிலைகளின் மாற்றங்கள்.
சாவு – உயிரற்ற திடப்பொருள்.

உதாரணம்:
விதை

ஒரு விதையை மண்ணில் புதைத்தால் அதை தூக்கம் எனக் கொள்ள வேண்டும்;

விதை என்கிற ஜடப்பொருள் மண்ணில் புதைந்து ( மற்றொன்றுடன் ஐக்கியம் ஆவதால் இதனை துயில் (அ) தூக்கம் (அ) நித்திரை என்பர்.
இந்த விதைக்கு தண்ணீர் ஊற்றுதல் போன்ற உயிர் வளரும் தன்மைக்கு செய்வது நடை என்பர்.
விதை வளர்ந்து செடியாக மாறி வாழ்வதற்காக காற்றை சுவாசிக்க ஆரம்பித்தல் ஊண் என்பர்.
செடி வளர்ந்து ( சூரிய வெப்பத்தால் பச்சையம் பெற்று பூரண உயிரோட்டம் ஏற்பட்டு பூ, காய்,, கனி என பயன்பட்டால் அது அரசு.

குண மாற்றங்கள், உணர்வுகளின் தாக்கங்கள் எப்போது எப்படி எல்லாம் மாறும் , அதனால் நன்மை உண்டா இல்லையா என்றெல்லாம் அறிவியலார் போல ஆராய்ந்து பகுத்து சாத்திரமாக வகுத்தனர்.


நடைமுறையில் , இந்த அளவிற்கு பகுத்து அறியும், செயல் படும் தன்மை, மெய்ப் பொருள் விளக்கத்தினை அறிவதற்கும் உணர்வதற்கும், பகுத்தறிவுள்ள மனிதன் ஈடுபடுவதில்லை.


புராண, இதிகாசங்களில் கூறப்படும் கருத்துக்களின் மெய்ப்பொருளை எத்தனை பேர் உணர்ந்து, தன் வாழ்க்கை நடைமுறைகளை மாற்றி இருக்கின்றனர் என்றால், ஒருவருமில்லை.....


காரணம் - நடைமுறை வாழ்க்கை நல்ல வாழ்க்கை வாழ விரும்புபவன், அதற்கான வழிமுறைகளைக் கடைபிடிப்பதில்லை!


பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?

14 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை அல்லது பவுர்ணமி வருகிறது.இந்த இருநாட்களிலும் சூரியனும் சந்திரனும் முழுவலிமையடைகின்றன.

இந்து ஜோதிடப்படி சூரியன் ஆத்மாக்காரகன் எனவும் சந்திரன் மனக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறது.

பூமியில் பிறக்கும் மனிதன் ஏதாவது ஒரு நாளில் பிறக்கிறான்.

அது வளர்பிறை பிரதமை என வைத்துக்கொள்வோம்.அவனது பிறந்த நட்சத்திரம் அசுவினி என வைத்துக்கொள்வோம்.அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி அவனது பட்சி ஆந்தை வருகிறது.

ஆந்தையின் குணம் என்ன?

அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே இரவில்தான் கிடைக்கும்.

தனது பட்சி ஆந்தை என அவன் அறிந்தால்,அவன் ஒருவரிடம் உதவி கேட்டுச்செல்ல வேண்டிய நேரம் இரவு மட்டுமே! 

பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது.

அவனுக்குஒரு மாதத்தில் (தமிழ்மாதத்தில்) வளர்பிறைகாலமான 14 நாட்களில் காரியங்கள் வெற்றியடையும்.
அந்த 14 நாளில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் அவனது பறவை(பட்சி)யான ஆந்தைக்கு மரணபட்சிநாளாக அமைகிறது.
அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாரியமும் படுதோல்வியடையும்

மீதி 13 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் 1 1/2 மணி நேரம் அரசபட்சி நேரமாகிறது.அந்த நேரத்தில் அவன் ஒரு சர்வாதிகாரியை சந்தித்தாலும் காரிய வெற்றி உண்டாகிறது.

இந்த பஞ்சபட்சி நேரத்தைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.

அவர்களது அரசபட்சிநேரம் பல சமயங்களில் ராகுகாலத்திலோ, எமகண்டத்திலோ யதார்த்தமாக அமைந்துவிடுகிறது.

இதைத் தான் அந்த அரசியல்வாதிகள் “நான் ராகு காலத்தில் மனுத்தாக்கல் செய்தேன்” என பகுத்தறிவு பகலவன்கள் போல பீற்றிக் கொள்கிறார்கள்

பஞ்சபட்ஷி

“உன்னை யொழிய ஒருவரையும்
நம்புகிலேன் பின்னை யொருவருவரை
யான் பின்செல்வேன் – பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை
தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே . “

பஞ்ச பட்சிகள் குறித்து ஓர் விளக்கம்

“பஞ்ச பட்சிகள்” என்றால் ஐந்து பட்சிகள் எனப் பொருள்படும். அவை வல்லூறு, ஆந்தை, காகம்,கோழி.மயில் என்பனவாகும்.

“வல்லூறு” என்பது வானில் பறக்கும் ஓர் இன்ப்பறவையாகும்.இதன் இன்மான கருடன் திருமால் வாகனமாகும்.

“ஆந்தை” என்ற பறவையை வடநாட்டில் திருமால் இருப்பிட்மாக மதித்துப் போற்றி வருகின்றர்.

“காகம்” என்பது சனீஸவரனின் வாகனம் என இந்துக்கள் போற்றி வணங்குகின்றனர்.

“கோழி” என்பது முருக பெருமானின் கொடியில் உள்ளதாகும்.”செவப் கொடியோன்” எனத் தமிழ் மக்கள் முருகப் பெருமானை போற்றி வணங்குகின்றனர்.

“மயில்” என்பது முருகப் பெருமானின் வாகனமாகும்.

மேற்கூறிய ஜந்து வகையான பறவைகளைக் கொண்டு நமது முன்னோர்கள் இந்தப பஞ்ச பட்சி சாஸ்திரத்தை உருவாக்கியுள்ளனர் 
என்பது குற்ப்பிடத்தக்கது.

 ஒவொருவரின் பிறந்த நட்சத்திரப்படி ஒவ்வொரு நாளிலும் அவருக்கு உகந்த நேரத்தை அறிவதற்கான கணிதம் இது! 

அரசு ஊண் நேரம் நடக்கும் பொழுதில் செயலாற்றினால் வெற்றி நிச்சயம்! 

மற்ற நேரம் பகுதிகளை விலக்கிட வேண்டும். 

ஏழு நாட்களிலும் பகல் நேர ஐந்து பகுதிகள்,  இரவு நேர பகுதிகளை அட்டவணையாக தயாரித்து வைத்துக் கொண்டு மிகுந்த பயன் பெறலாம்! 

அதாவது ஜோதிடம் ,கைரகை, அகஸ்தியர் ஆருடம்,சகாதேவர் ஆருடம்,பிரசன்னம்,பல்லி சாஸ்திரம்,அங்க சாஸ்திரம்,தேங்காய் ஜோதிடம்,சீதை,ராமர் சக்கரம்,வெற்றிலை பாக்கு ஜோதிடம்,வாக்கு கேட்டல் போன்ற பலவிதமான சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகத் தந்து சென்றுள்ளனர்!

 மேற்கூறிய சாஸ்திரங்களில் மிகவும் சிறந்தது ஜோதிடக் கலையாகும். 

அடுத்து,கை ரேகை சாஸ்திரம் ஆகும். 

மற்றதெல்லாம் ஆருட சாஸ்திரம் போல் கூறப்பட்டுள்ளது! 

மேற்கூறிய சாஸ்திரங்கள் போக,பஞ்ச சாஸ்திரம் என்றொரு கணிதத்தையும் நன்றாக ஆராய்ச்சி செய்து நமக்குத் தந்து சென்றுள்ளனர். 

இதை “புள்ளியல் சாஸ்திரம்” என்றும் கூருவது உண்டு.

வல்லூறு, ஆந்தை, , காகம் ,கோழி ,மயில் 5 பட்சிகள் ஒவ்வொரு நாளும் தங்களது தொழிலை ஒழுங்காக செய்து வருகின்றன.

பொதுவக, “பஞ்ச பட்சி சாஸ்ததிரம் ” நல்ல காரியம் ஆரம்பிக்கும், வீடு கட்டுவதற்கும்,கிரகபிரவேசத்திற்கு நல்ல நாள் குறிக்கும்போது பேருதவியாக இருக்கும் எனலாம். 

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது போலவே, இந்த சாஸ்திரத்திற்கும் திச-புத்தி-அந்திர காலங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஜாதகப்பலன் அளவிற்கு இந்து சாஸ்திரம் வேலை செய்யாது என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.

அதாவது,ஒருவருக்கும திசா புத்திகள் நல்லபடியாக அமைந்து, 
பட்சி சாஸ்திரம் திசா-புத்தி சாவு-துயிலாக இருந்தால்,அவரது வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது! 
அதே சமயம் பட்சி சாஸ்திர – புத்திகள் அரசு ஊணாக இருந்தால், அவரது வாழ்வில் மிகவும் சிறப்பான நல்ல பலங்கள் நடைபெறும் என்பது எமது ஆய்வில் உண்மையாகும். 
அகஸ்தியர், உரோம ரிஷி,கும்பமுனி,காகபுசுண்டர்,போகர் போன்ற பல ரிஷிகள் “பஞ்ச பட்சி சாஸ்திரத்தை” தங்களது சுவடி வாயிலாக வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது! 

மேலும், “திருடு போன பொருள் கிடைக்குமா? காணாமல் போன மாடு திரும்பி வருமா? காணா போன பையன் திரும்பி வருவானா?” போன்ற ஆருடம் சம்பந்தமான கேள்விகளுக்கும் இந்த சாஸ்திரம் பெரிதும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திரத்திற்குரிய பட்சிகள்:

அசுவனி, பரனி, கிருத்திகை,ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய ஐந்து ந்ட்சத்திரத்திற்கும் பட்சி வல்லூறு, 

திருவாதிரை, புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம் ஆகிய ஆறு ந்ட்சத்திரத்திற்கும் பட்சி ஆந்தை ,

உத்திராடம் ,அஸ்தம், சித்திரை,சிவாதி, விசாகம் ஆகிய ஐந்து நட்சத்திரத்திற்கும் பட்சி காகம், 

அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரத்திற்கும் பட்சி கோழி, 

திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி ஆகிய ஆறு நட்சத்திரத்திற்கும் பட்சி மயில். 

இதை ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டு பார்க்க வேண்டும். 
ஜென்ம நட்சத்திரம் தெரியாதவர்கள் பெய்ரின் முதல் எழுத்துப்படி அறிய வேண்டும்.

 நட்சத்திரம் தெரியவில்லையா ? கவலையில்லை. ஆ. ஆ ஒள முதல் எழுத்தாய் கொண்டவர்களுக்கு வல்லாறுதான் பட்சியாகும். உதாரணமாக அருணாசலம், கந்தசாமி, கார்த்திகேயன், தங்கசாமி, ராம்குமார், கமலா, தருண், பரமேஸ்வரன், லட்சுமி, லாரன்ஸ் இப்படி அ, ஆ கூட்டெழுத்து முதல் எழுத்தாய் உள்ளவர்கள்.

ஆந்தை பட்சி
திருவாதிரை, புனர்பூகம், பூசம் ஆயில்யம், மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆந்தை பட்சிக்கு சொந்தக்காரர்கள். இ.ஈ முதல் எழுத்தாய் உள்ளவர்கள் ஆந்தை பட்சிக்கார்கள். உதாரணமாக கிருஷ்ணன், திருநாவுக்கரசு, பிரமிளா, ரிஷி, ரீட்டா, சிந்த இப்படி இ,ஈ, கூட்டெழுத்தாய் அமைந்தவர்களும் ஆந்தை பட்சிக்காரர்களே

காகம் பட்சி
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரக்காரர்கள் காகப்பட்சியினைக் கொண்டவர்கள். பெயரில் முதல் எழுத்து உ.ஊ அமைந்தவர்களும் காகப் பட்சிக்காரர்களே, உதாரணமாக உசேன், உண்ணாமலை, முத்துச்சாமி, ருக்மணி, குமார்.

கோழிப்பட்சி
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் (தனுசு) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோழிப்பட்சிக்காரர்கள். பெயரின் முதல் எழுத்தாய் எ, ஏ, கொண்டவர்களின் கோழிப்பட்சிக்குரியவர்கள். உதாரணமாக ஏழுமலை, தெட்சிணாமூர்த்தி, பெருமாள், தெய்வானை, மேரி, ஜெயலலிதா.
மயில் பட்சி

திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மயில் பட்சியின் ஆட்சி உள்ளவர்கள். பெயரின் முதல் எழுத்தாய் ஒ,ஓ கொண்டவர்கள் மயில் பட்சிக்குரியவர்களே.
உதராணமாக கோகுல், கோபால், கோவிந்தம்மாள், ஜோசப் 

இதுவே தேய்பிறையில் அதாவது பௌர்ணமியில் அடுத்த நாளிலிருந்து அமாவாசைக்கு முதல் நாளுக்குள் பிறந்திருந்தால் எல்லாமே மாறிவிடும். 

3 comments:

  1. அனைத்து தகவலும் பிரமிப்பாக இருக்கிறது நண்பரே
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. தமிழனையும் தமிழர் தம் கலாசாரத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மண்ணின் மாண்பையும் சிறிதளவாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முயற்சியில் தொடர்கின்றேன்...
      தங்களின் அன்பிற்கு நன்றி நண்பரே!

      Delete
  2. அருமையான இலக்கியப் பகிர்வு.

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer