Breaking News
Loading...
Tuesday, January 26, 2016

Happy Republic Day !!!!!!!!!!!

Tuesday, January 26, 2016



Republic Day honors the date on which the Constitution of India came into force on 26 January 1950 replacing the Government of India Act (1935) as the governing document of India.

The Constitution was adopted by the Indian Constituent Assembly on 26 November 1949, and came into effect on 26 January 1950 with a democratic government system, completing the country's transition towards becoming an independent republic. 26 January was chosen as the Republic day because it was on this day in 1930 when the Declaration of Indian Independence (Purna Swaraj) was proclaimed by the Indian National Congress as opposed to the Dominion status offered by the British Regime.

It is one of three national holidays in India



1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26 ஆம் நாள் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
28 ஆம் நாள் ஆகஸ்து மாதம் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து 1948 இல் சுதந்திரம் பெற்ற பின் 26 சனவரி நாளை குடியரசுத் தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.
------------------------------------------------------------------------------------------------------------
சி. ஜெயபாரதன், கனடா

நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரம்
கண் விழிக்க இன்னும்
விடி வெள்ளி எழ வில்லை !
முடிய வில்லை  இருளாட்சி !
பொருளாட்சி ஆக்கும் 
பூதப் பண முதலைகள்
மடிக்குள் வெடி மறைத்து
நடக்குது மதப்போர் !
ஏர் முனைகள் வளைக்கப் பட்டு
வாள் முனைகள் ஆயின !
கார்மேகம் இப்போ தெல்லாம்
கரியமிலம் பொழிகிறது !

பாரதப் பண்பாடுகள் யாவும்
நாராய்க் கிழிந்து,
வேர்கள்
கீழ்நோக்கிப் போகாது
மேல் நோக்கித் துளைக்கும் !
ழுத்தாணிகள் ஆடை நீக்கி 
ஒழுக்கம் தவறிக்
குத்தூசி களாய்க் கோலமிடும் !

பத்திர காளியின் கைச் சூலாயுதம்
பக்தரின் கைவசம் மாறும் !
பல்கலைக் கழகங்கள் வணிகச் சந்தையாய்
பண வேட்டை ஆடும்.
வேலை கிடைக்குது
கப்பம் ஒரு லட்சம் கட்டினால் !

கீழ் ஜாதியார் உயர் நிலைக்கு ஏறி
மேல் ஜாதி ஆகவில்லை !
மேல் ஜாதியார் கீழ் நிலைக்குப் போய்
தாழ்வு பெற்றார் !
கணினிப் பொறி வர்த்தகப் பணிகள் 
ஆயிரக் கணக்கில் பெருகி
ஏழையர், செல்வந்தர்
வேற்று மைகள் பன்மடங்கு
ஏறிப் போச்சு !
நடிப்புக்கு மதிப்பளிக்கும்
நாட்டில்
படிப்புக்கு மதிப்பில்லை !

மருத்துவம் பணப் பட்டம் ஆனது !
உயிர்களுக் கில்லை மதிப்பு !
உன்னைப் பெற்ற அன்னையோ  
உடன் பிறந்த தங்கையோ
நாட்டில் தனியாக
நடந்து செல்ல முடியாது  !
கருவிலே உருவாகும்
பெண் சிசுவுக்கு
மரண தண்டனை பிறப்ப தற்கு முன்பே !
பாரத மணிக்கொடி
நாராய்க் கிழிந்து போய்ப் பறக்குது !
விடியாத சுதந்திர சூரியன்
அத்தமிக்குது !
குடியாட்சியைத் தைப்பதா ?
முடிப்பதா ?
 +++++++++++++
S. Jayabarathan [jayabarathans@gmail.com] (January 26, 2016)

2 comments:

  1. இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பிற்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே!

      Delete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer