Breaking News
Loading...
Thursday, January 7, 2016

காக்கையின் மகத்துவம்....

Thursday, January 07, 2016
சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

--------------------------------------------------------------------------------------
திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.

நீங்கள் எத்தனை கோடி ,
கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,
நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.
தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால் ,உங்களுக்கு அந்த சனிபகவான் —முழு அருள் கடாட்சம் வழங்கி ,
உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட ,ஒரு தேவரகசியம் போன்ற தகவலை ,
நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்
மட்டற்றமகிழ்ச்சி…….

தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப் பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே )
ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,
அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.

வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,
சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படித்தாலும்,
ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..

இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….

தெரியவில்லை!.. ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் 
அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..

செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.

தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்  வழிபாடுதான்.

உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்  உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான  சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான ஜீவ ராசி – காக்கை இனம்.

குடும்ப  ஒற்றுமை  வேண்டும்  என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.

தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,
தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்த காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள்.

திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது  என்ற  கணக்கில்  கைப்பிடி  அளவு  எடுத்து வைத்து,
காக்கைகளை “கா…கா…’

என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.

அவர்களின் அழைப்பினை  ஏற்று  காக்கைகளும்   பறந்துவரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச்  சுவைக்கும்.
அப்படிச்  சுவைக்கும்  போது  அந்தக்காக்கைகள் “கா…கா…’
என்று  கூவி  தன்  கூட்டத்தினரை  அடிக்கடி   அழைக்கும்.
அந்தக்  காக்கைகள்  உணவினைச்  சாப்பிட்டுச்  சென்றதும்,
அந்த  வாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப் பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.

மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.

இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.

மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவு ம்
கருதுகிறார்கள்.

காக்கை சனிபகவானின்வாகனம்.
காக்கைக்கு  உணவு  அளிப்பது  சனிக்கு  மகிழ்ச்சி  தருமாம்.
காக்கைகளில்  நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கை  என  சிலவகைகள்   உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும்  காணமுடியாது.
எமதர்மராஜன்  காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.

அதனால் காக்கைக்கு உணவு அளித்தால்
எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். 

அதனால்,
காக்கைக்கு  உணவிடுவதால்  ஒரேசமயத்தில  ்எமனும் சனியும்
திருப்தியடைவதாகக்  கருதப்படுகிறது.   தந்திரமான  குணம்  கொண்ட காக்கை   காலையில்  நாம்  எழுவதற்கு  முன்,
காக்கையின்  சத்தம் கேட்டால்  நினைத்தகாரியம்  வெற்றிபெறும்.

நமக்கு   அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்லபலன் உண்டு. 
வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும்..


எனவே,
காக்கை க்கு உணவிடுவதாலும் சனிபகவான்,
எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்றுமகிழ்வுடன் வாழலாம்.

By

Mohan Raj
Author / Friendshipworld


2 comments:

  1. நல்ல தகவல்கள்.நன்றி

    ReplyDelete
  2. அரிய தகவல்தான் நண்பரே காக்கைகள் இல்லாத அபுதாபியில் நான் என்ன செய்வது என்பதுதான் எனக்கு குழப்பமாக இருக்கின்றது
    தமிழ் மணம் 1

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer