ஐடியா அய்யாசாமி
இவரைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்:
இவரை கிராமத்தான் என்றும் சொல்லமுடியாது. நகரத்து நாகரீகம் தெரிந்த மனிதரென்றும் சொல்லமுடியாது.
இவருக்கு தெரியாத விஷயம் இருக்கா என்று யோசிக்க வைக்கும் ஒரு சாதாரண மனுஷர் தாங்க.
இவர் இவருக்கு நேரம் கிடைக்கறப்ப நம்ம தளத்திற்கு வருகை தரப்போராருங்க....
எதோ சொல்றாருன்னு கேட்டுதான் வைப்போமே....
நல்லதுன்னு மனசுக்கு பட்டதுன்னா......எடுத்துக்கோங்க....இல்லைன்னா விட்டுட்டு போங்க.....
இதன்னால உங்களுக்கும் அவருக்கும் எதுவும் ஆகப்போறதில்லைங்க ....
சரி.... அவரே வந்துட்டாருங்க....
1...2....3.... கவுண்ட் டவுன் ஸ்டார்ட்....
நாந்தாங்க அய்யாசாமி.....
நமக்கு பெத்தவங்க வைச்ச பேரு மறந்து போச்சு.....ஐடியா அய்யாசாமி தான் நிலைச்சுப் போச்சு .....
நேரம்....நேர காலம் சரியா இருந்தா எல்லாமே நல்லதா நடக்கும்னு சொல்வாங்க... நேரம் கெட்டுப்போச்சுன்னா எல்லாமே கெட்டதுன்னு சொல்லுவாங்க....
சரி.... நம்ம வீட்டுலே இருந்து ஆரம்பிப்போம்.....
*சமையல் அறையில் அலமாரி மேற்கு, தெற்கு சுவர்களை ஒட்டி அமைக்க
வேண்டும்.
*சமையலறை கதவுக்கு நேர் எதிரில் அடுப்பு வைக்கக் கூடாது.
*தெற்குப் பார்த்து சமையல் செய்வது தற்கொலை உணர்வைத் தூண்டும்.
*மேற்குப் பார்த்து சமையல் செய்வது தீ விபத்தை உண்டாக்கும்.
*வடக்குப் பார்த்து சமையல் செய்வது துர்மரணத்தை உண்டாக்கும்.
*படிப்பறை கிழக்குப் பக்கம் இருக்க வேண்டும்.
*அலமாரி கிழக்கு அல்லது வடக்குப் பார்த்து இருக்க வேண்டும்.
*பூசையறையில் அலமாரி பணம் வருவதும் போவதுமாக இருக்கும்.
பணம் தங்காது.
*அக்கினியில் அலமாரி பணம் அக்கினியில் கரைவதைப் போல செலவாகும்.
*வாயுவியத்தில் அலமாரி அமைத்தால், வரவுக்கு அதிகமான
செலவை உண்டாக்கும்.
*மேல்நிலைத் தண்ணீர் தொட்டி மேற்கு, தெற்கு சார்ந்தாற்போல்
இருக்க வேண்டும்.
*ஈசானியத்தில் கண்டிப்பாக மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி
அமைக்கக் கூடாது.குடும்ப கெளரவத்தைக் கெடுக்கும்.
*பிரம்மஸ்தானத்தில் மாடிப்படி மற்றும் மேல்நிலைத் தண்ணீர்த்
தொட்டி குடும்ப கெளரவத்தைப் பாதிக்கும்.
*கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வீட்டின் தரையைவிடத் தாழ்வாக
இருக்க வேண்டும்.
*ஈசானியத்தில் மாடிப்படிகளை அமைக்கக் கூடாது.
*மாடிப்படிக்குக் கீழ் கடவுள் படங்களை வைத்து வழிபடக்கூடாது.
*தந்தையின் வீட்டைப் பாகப் பிரிவினை செய்யும்போது,
மூத்தவர்களுக்கு மேற்குப் பாகத்தையோ, அல்லது தெற்குப் பகுதியையோ
கொடுக்க வேண்டும். இளையவர்களுக்குக் கிழக்கு அல்லது வடக்குப்
பகுதிகளில் கொடுக்க வேண்டும்.
*மேற்குத் திக்கிலுள்ள சுவர் வெடிக்குமானால்
வர்த்தகத்தில் நஷ்டமடைவான். உட்பக்கமாகக் கட்டடச் சுவர்
விழுமானால் வீட்டுச் சொந்தக்காரன் நாசமடைவான்.
*வாசம் செய்யும் வீட்டில் திடீரென்று கிழக்குச் சுவரில்
வெடிப்பு உண்டானால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் தரித்திரமடைவார்கள்.
*தெற்கில் உள்ள சுவர்களில் வெடிப்புக் கண்டால் அந்த வீட்டில்
யாராவது மரணமடைவார்கள்.
*வடக்கில் உள்ள சுவரில் வெடிப்பு உண்டானால் திடீர் விரயங்கள் உண்டாகும்.
*வீடுகளுக்குத் தாழ்வாரம் ஐந்தரை அடிக்குக் குறையாமல்
அமைக்க வேண்டும்.
*குடியிருப்பதற்காகக் கருங்கல்லில் கட்டடங்கள், வீடுகள் கட்டக்கூடாது.
அது குடும்பத்தில் பல பிரச்சனைகளைக் கொடுத்துக் குடும்பத்தில்
நிம்மதியைக் குலைத்துவிடும்.
*ஏற்கனவே இடம் அல்லது வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டை
ஒட்டியோ அல்லது இடத்தை ஒட்டியோ உள்ள வடக்கு அல்லது
கிழக்கில் உள்ள வீடு, மனை வாங்கலாம். தெற்கு, மேற்கு கூடாது.
*வீடுகள், எந்தத் திசையில் வாசல் இருந்தாலும், வெளியில் இருக்கும்
தெரு மட்டத்தை விட வீட்டுத் தளம் உயரமாக இருக்க வேண்டும்.
*பிரதான வாசல்களை விட மற்ற உள்வாசல் கால்கள் கொஞ்சம்
சிறிதாக உள்ளடக்கமாக இருக்க வேண்டும்.
*வீட்டின் கழிவு நீர் ஈசான்யத்தில் வெளியேற வேண்டும். இல்லையெனில்,
கழிவுநீர் ஈசான்யத்தில் ஒரு சின்னத் தொட்டியில் விழுமாறு செய்து,
பின்பு அங்கிருந்து தனியே வாட்டம் கொடுத்து மற்ற திசைகளில்
கொண்டு செல்ல வேண்டும்..
இன்னைக்கு இது போதும்.... வரட்டுங்களா.....
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!