
வாழ்க்கையும் இந்த படத்தைப் போல ரிஸ்க் எடுத்துத் தான் ஆகனும்...
இன்றைக்கும் வீட்டுக்குறிப்பு தாங்க....
பேனா, பென்சில் என்று எதாவது எடுத்து உங்க டைரியில் குறித்து வைத்துக் கோங்க!... தினமும் இதனை படிக்கனும்,,,,
சரி லிஸ்ட் சொல்றேன்... எழுதிக்கோங்க!


01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்கவேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால்ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம்
இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்துகொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேசவேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில்அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலாசெல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்கவேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப்பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று
எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்கவேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்யவேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது
உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை,
மனைவியிடமும் காட்ட வேண்டும்.
ஏனென்றால்
மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,
தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன்கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச்
செல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்
.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீயபழக்கங்கள் கூடாது
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
மனைவி சொல்லே மந்திரம் என்று கடைபிடித்து நிம்மதியுடன் வாழ்க!
அருமை நண்பரே ஒவ்வொரு புதுமணத் தம்பதிகளும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் களஞ்சியம் நன்று
ReplyDeleteதமிழ் மணம் 1
வாருங்கள் நண்பரே!
Deleteதங்களின் அன்பிற்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!
மேற்கண்டவற்றில் குறைந்தது பத்து இருந்தால் பத்தினியின் அன்பு என்றும் மாறாததே....
ReplyDeleteஇரா.கதிரவன், திருவண்ணாமலை
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Delete