76. நோய்களிலிருந்து விடுதலை பெறுவதற்காகக் கருணையே உருவான கடவுள் நமக்கு அருளியுள்ள மருந்துகள் இயற்கையில் ஏற்படும் நோய்களையே நீக்க முடியும். அலோபதி மருந்துகளாலும் சிகிச்சையினாலும் உடலின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் பல ஆண்டுகளாய் ஏற்படும் அழிவுகளும் ஊனங்களும் உயிர்ப்புச்சக்தியினால்தான் நீக்கபடவேண்டும். அவ்வழிவுகளுடனும், ஊனங்களுடனும் நீடிக்கும் குணமுள்ள விஷ நோய்க் கூறுகள் பின்னனியில் காணப்படுமானால் அவ்விஷ நோய்க்கூறுகளை அடக்குவதற்காகத் தகுந்த உதவிகளை நாம் செய்யலாம். உயிர்ப்புச் சக்தியின் வலிமை மேற்படி அலோபதிச் சிகிச்சையினால் மிகவும் குறைந்து போய் இருந்தால் எதுவும் செய்யவே முடியாது. ஆகவே உயிர்ப்பு சக்தியின் வலிமை குறைந்து விட்டால் நோயை நீக்க முடியாது. அவ்வித நிலைமையை நீக்கத்தக்க மருந்துகள் மனிதர்களால் கண்டு பிடிக்கப்பட்ட எந்த வைத்தியத்திலும் தீர்க்கவே முடியாது. இருக்கவும் முடியாது. உயிர்ப்புச் சக்தியின் வலிமை குறைந்து விட்டால், நோயை நீக்க முடியாது.
77. கெடுதலை உண்டாக்கும் மது பானங்களை உட்கொள்ளும் பழக்கம் அளவு மீறியச் சிற்றின்பத்தில் ஈடுபடுதல், உயிர் வாழ்வதற்கு மிகத்தேவையான பொருள்களை நீண்ட நாட்களுக்கு உட்கொள்ளாமல் இருத்தல்,ஆரோக்கியக் குறைவான பிரதேசங்களிலும் (முக்கியமாகச் சதுப்பு நிலங்களில்) காற்றோட்டமில்லாத வீடுகளிலும் குடி இருத்தல், போதிய அளவு உடல் பயிற்சி இல்லாமை, நல்ல காற்றைச் சுவாசிக்காமை,அளவு மீறிய உடல் உழைப்பாலும் மன உளைச்சலாலும் தேக ஆரோக்கியம் பாழாகுதல், ஓயாத கவலை முதலிய காரணங்களால் தோன்றும் நோய்கள், இதனை திடீர் வகை என்று அழைக்கலாம். மனிதர்களால் தாமாகவே தேடிக்கொள்ளப்படும் இத்தகைய நோய்கள், அந்நோயாளிகள் ஒழுங்கான முறையில் வாழத்தொடங்கினால், உடலின் உட்புறத்தில் நீடிக்கும் குணமுள்ள விஷ நோய்க்கூறும் இல்லாவிட்டால் தாமாகவே நீங்கிவிடுகின்றன. ஆகவே இத்தகைய நோய்களை நீடிக்கும் நோய்கள் என்று சொல்லக்கூடாது.
78. நீடிக்கும் குணமுள்ள விஷ நோய் கூறுகளின் ஏதோ ஒன்றினால்தான் உண்மையான இயற்கையான நீடிக்கும் வகை நோய்கள் தோன்றுகின்றன. விஷ நோய்க் கூறுகளை முறியடிக்கத்தக்க மருந்துகளை உபயோகிக்காமல் அவைகளின் போக்குப்படிபோக அனுமதித்தால் நாளுக்கு நாள் அவை (நோய்கள்) கடுமையாகவும் அதிகரிக்கவும்தான் செய்யும். உடலையும் உள்ளத்தையும் எவ்வளவு நல்ல முறையில் வைத்திருந்தாலும் நோயாளியின் ஆயுள் முடியும் வரை அந்நோய்கள் ஒவ்வாரு நாளும் அதிகமாகிக் கொண்டு அவரைத் துன்புறுத்தவே செய்யும். இவ்வித நோய்களே உலகில் அதிக அளவிலும் மனித இனத்தின் மாபெரும் எதிரிகளாகவும் இருந்துவருகின்றன. குறிப்பு: கட்டு விடாத உடல் அமைப்பு, தூய வாழ்க்கை, உயிர்ப்புச் சக்தியின் முழு வலிமை ஆகிய எதனாலும் மேலே கூறப்பட்ட விஷ நோய்க்கூறகளால் தோற்றுவிக்கப்பட்ட நோய்களை நீக்க முடியாது. நல்ல உணவும் உறைவிடமும் பலனளிக்காது.
79. சிபிலிஸ் (மேகக்கிரந்தி நோய்) ஒன்றுதான் நீடிக்கும் குணமுள்ள விஷத்தன்மையுள்ள நோய் என்று ஓரளவு கருதப்பட்டது. தக்கப்படி மருந்துகளைக் கொடுத்துச்சிகிச்சை செய்யாவிட்டால் இந்நோய் சாகும் வரை உடலைவிட்டு நீங்காது தகுந்த மருந்துகளின் துணையில்லாமல் உயிர்ப்புச்சக்தியினால் தன்னந்தனியாக நீக்கமுடியாத நோய்களில் சைக்கோஸிஸ் (கெட்ட சதை வளரும் தன்மையுள்ள (மேகவெட்டை)) என்பது ஒன்று. நீடிக்கும் குணமுள்ள விஷப்பொருள்களில் இதுவும் ஒன்றென்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால் இதுவரை அவ்வாறு கருதப்படவில்லை. ஏனென்றால் உடலின் வெளிப்புறத்தில் தோன்றும் கெட்ட சதைகளை வெட்டியெறிந்து விட்டால் நோயைக்குணம் செய்து விட்டதாக அலோபதியர்கள் நினைத்தனர். மீண்டும் மீண்டும் கெட்ட சதை தோன்றுவதை அவர்கள் கவனிக்கவில்லை.
80.மேலே குறிப்பிட்ட சிபிலிஸ் சைக்கோஸிஸ் ஆகிய இரு விஷப் பொருள்களை விட எல்லா வகையிலும் பெரியது சோரா என்று அழைக்கப்படும் விஷப் பொருளாம். (அதாவது யோனிமானியில் புண் ஏற்பட்டால் சிபிலிஸ் அந்த இடத்தில் கெட்டசதை வளர்ந்தால் சைக்கோஸிஸ் சொறி சிரங்கு ஏற்பட்டால் சோரா.) சிபிலிஸ் விஷம் யோனியில் அல்லது மானியில் புண்ணை ஏற்படுத்துவதன் மூலமும் சைக்கோஸிஸ் விஷம் கெட்ட சதை வளர்ச்சிகளின் மூலமும் உடலினுட்புறத்திலுள்ள தங்களுடைய விஷத்தன்மைகளை வெளிபடுத்துகின்றன? இவைகளைப்போலவே சோரா விஷமும் உடலின் உட்புறம் முழுவதிலும் தன் விஷத்தைப் பரப்பிய பிறகு உடலின் வெளிப்புறத்திலே அதாவது சருமத்தின் மேல் சொறி சிறங்குகளை உண்டாக்கி தான் உள்ளே இருப்பதை அறிவிக்கிறது. சில சமயங்களில் ஒரு சில சிரங்குக்கொப்பளங்கள் மட்டும் இருக்கும் தாங்கமுடியாத அரிப்பை உண்டாக்கும். இந்நோய் ஒன்றுதான் சோராவினால் எற்படுவதாக நினைக்க வேண்டாம். கணக்கிட்டுச் சொல்லமுடியாத பலப்பலநோய்களுக்கு மூல காரணம் சோராதான்.
நரம்புத் தளர்ச்சி, சங்காதோஷம் (பித்து பிடித்ததுபோல்) இருப்பவர்கள் காரணமில்லாத மன ஏக்கம், பைத்தியம், அறிவு மங்குதல், காக்கை வலிப்பு, மற்ற பல விதமான வலிப்புகள், எலும்புகள் உறுதிகுறைதல், புற்று சதைக்கட்டி, வாதநோய், மூலம் மஞ்சள் காமாலை, உடல் நீல நிறமடைதல், நீர் சுரப்பு, மாதவிடாய் வெளியாகாமை, வயிறு, மூக்கு, சுவாசகோசங்கள், மூத்திரப்பை, கருப்பை ஆகிய உறுப்பிகளிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து வெளியேறுதல், காசம்,சுவாச கோசங்களில் வேக்காடு,ஆண் தன்மைக் குறைவு,பெண்களின் மலட்டுத் தன்மை,ஒற்றைத் தலைவலி,காது கேளாமை, கண்படலம், கண்பார்வை மங்குதல்,குருடாகுதல், மூத்திரக் கற்கள், பாரிச வாயு, புலன் உணர்ச்சிகளில் கோளாறு,பல வகைப்பட்ட வலிகள் என்று தனித்தனி நோய்களாய் வைத்திய நூல்களிலே பிரித்துக் கூறப்படும் எல்லாக் கோளாறுகளையும் உண்டாக்குவது இந்த சோரா விஷ நோய்க்கூறே ஆகும்.
81. மிகப் பழைமையான தொற்றும் குணமுள்ள இவ்விஷ நோய்க்கூறு நூற்றுக்கணக்கான தலைமுறைகளில் கோடிக் கணக்கான மனித உடல்களில் தோன்றி நம்பமுடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டது. மாபெரும் மனித சமுதாயத்தில் கணக்கிட முடியாத நோய்களாக உருவங்கொள்ள இவ்விஷ நோய்க் கூற்றுக்கு எவ்விதம் சாத்தியமாகியிருக்கிறது என்பதைக் கீழ் உள்ள காரணங்களால் நாம் ஓரளவு ஊகிக்கலாம். பல்வேறு சந்தர்ப்பங்கள் பல வகையான இம்மாதிரியான நீடிக்கும் வகை நோய்களை சோராவின் இரண்டாவது வகைக்குறிகள் தோன்ற உதவி புரிந்துள்ளன. அதைத் தவிர மனிதர்களின் உடல் அமைப்பும் விவரிக்க முடியாத அளவுக்கு வித்தியாசமாய் இருக்கிறது. ஆகவே உள்ளிருந்தும் வெளியேயிருந்தும் சில சமயங்களில் தொடர்ந்தும் தாக்கும் பலவகைப்பட்ட விஷ நோய்ப் பொருள்கள் எண்ண முடியாத பலவகைக் கோளாறுகளையும் கஷ்டங்களையும் உண்டாக்கியிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. பண்டைக்கால வைத்திய நூல்களிலே ஒவ்வொரு கோளாறையும் தனித்தனியாய்ப் பெயரிட்டு தனிப்பட்ட நோயாக விளக்கப்பட்டிருப்பதற்கு அறியாமையே தான் காரணம். (அவர்கள் சோரா என்ற மூலத்தை அறியவே இல்லை )
82. நீடிக்கும் வகை நோய்களின் பிறப்பிடம் தான் என்று கண்டு பிடிக்கப்பட்டது? சோரா விஷ நோய்களை நீக்கவல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது ஆகிய இரண்டினாலும் பெரும்பாலான நோய்களின் தன்மையை அறியும் விஷயமாக வைத்திய சாஸ்திரம் சிறிது முன்னேற்றமடைந்து விட்டது. ஆயினும் அக்கண்டுபிடிப்புகளுக்கு முன்நோயின் குறிகளையும் விசேஷக் குணங்களையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாக இருந்ததுபோல் இப்பொழுதும் ஹோமியோபதி வைத்தியர் தன்னிடம் சிகிச்சை பெறவரும் நீடிக்கும் வகை சோரா தொடர்புள்ள) நோய்கள் ஒவ்வொன்றுக்கும், ஏற்ற மருந்தைத் தேர்ந்தெடுக்க நோயின் குறிகளையும் விசேஷ குணங்களையும் கவனிக்க வேண்டியது அவசியம்தான். ஒவ்வொருநோய்க்கும் ஏற்றபடிச் சிகிச்சை செய்தால் ஒழிய உண்மையான குணம் ஏற்படுவதில்லை என்பதே அதற்குக் காரணம். நோயின் விவரங்களை ஆராய்வதில் திடீர் வகையை சேர்ந்த மிகவேகமாக வளரும் குணமுள்ள நோய்கள் நீடிக்கும் வகையைச் சேர்ந்த நோய்கள் ஆகிய இரண்டுக்கும் சிறிது வேற்றுமை உண்டு. திடீர்வகை நோய்களின் முக்கிய குறிகள் தெளிவாய்த் தெரிகின்றன. எளிதில் நம் புலன்களுக்குத் தென்படுகின்றன. நோயின் பெரும்பான்மையான விவரங்கள் வெளிப்படையாய் இருப்பதால் அதிகக் கேள்விகள் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. பல ஆண்டுகள் படிப்படியாய் வளர்ச்சியடைந்து நீடிக்கும் வகை நோய்களில் அவைகளின் விவரங்களைத் தெரிந்துகொள்வது மிகவும் கஷடமாய் இருக்கிறது. நோயின் வகையும் தோன்றிய காரணமும்:-
குறிப்பு:
டாக்டர் சாமுவேல் ஹானிமேன் அவர்கள் இரண்டு வகை வியாதிகள் தான் என்கிறார்.
1. தற்பொழுது தோன்றுவது (Acuite) என்றும், மற்றொன்று நாட்பட்டது (Chronic) என்றும், பரம்பரை விஷம். இதை மியாசம் (ஆயைளயஅ) இதன் அர்த்தம் பரம்பரை பரம்பரையாக ஆன்மாவில் ஒட்டிக் கொண்டு வரும் விஷம் என்கிறார். இந்த விஷம் எப்பொழுதும் கண்களுக்கும் எவ்வகை கருவிகளுக்கும் எப்பொழுதும் தெரியாது என்கிறார். இது எல்லா மனிதருக்கும் உண்டு என்கிறார். இதில் 3 வகை உண்டு சந்தர்ப்ப சூழ்நிலையினால் ஆன்மாவிலிருந்து விழித்து எழும்போது உடல் உறுப்புகளை தாக்கி குளருபடி செய்யும் போது அந்த குளறுபடியைத்தான் அக்கியூட் என்கிறார். மறறொன்றை நாட்பட்ட (க்ரானிக்) வியாதி என்கிறார். க்ரானிக்கின் விழிப்புதான் அக்கியூட் ஆகும். இரண்டு தான் வியாதிகள் இந்த மண் உலகில் தோன்றுகின்ற அனைத்து உயிர்களுக்கும் இவை பொருந்தும் என்கிறார். (சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவத்தில் சொல்லுகின்ற கிரக மாற்றம் தட்ப, வெப்பம் உணவு வகைகளில் வித்தியாசம் உடலில் ஏற்படுகின்ற இரசாயன மாற்றத்தை, அறிந்து கொள்ள நாடி (ஜாதகம்) போன்றவைகளை வியாதி என்றும் அதை தணிக்க பத்தியம், நம்பிக்கை, ஏற்ற உணவு, இரசாயனத்தை மாற்றதக்க மருந்து, விரதம், நோன்பு, பக்தி, பஜனை போன்றவைகளின் மூலமாக தணிக்கப்படுகிறது.)
அலோபதி மருத்துவத்தில் உடலின் மாற்றத்தை உறுப்புகளை கண்டு, உறுப்பின் தோற்றத்தை, மாற்றத்தை கண்டு அதன் சிற்றுடம்புகளின் (அனுக்களின); தோற்றத்தையும் அதன் சிதைவுகளுக்கு பின்பு ஏற்படும் தீமைகளின் வகைகளையும், மாற்றத்துக்கு ஏற்ப நோய் என்றும், நூற்றுக்கணக்கான இடப்பெயராக கிருமிகளின் பெயர்களை இப்படி பல நூற்றுகணக்கான வியாதி பெயர்களாக சொல்கிறார்கள். Dr.ஹானிமேன் எழுதிய க்ரானிக் டிசிஸ் என்ற நூலில் மூன்று விஷயங்களைப் பற்றி கூறுகிறார். பார்த்துக் கொள்ளவும். ஆனால் இன்று 17 மியாசம் வரை வந்து விட்டது. அவைகளையும் தக்க நூல்களில் பார்த்து தெரிந்து கொள்ளவும். தற்காலத்தில் வாழ்வாங்கு வாழந்து வரும் பெரியார் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வியாதிகளைப் பற்றி கூறும் போது ஹானிமேன் கூறிய வியாதிகளின் கருத்தை விட விஹ்சியதாகவும் அகன்ற ஆராய்ச்சியின் அதி நுட்பமாகவும் மிக சுருக்கமாகவும் வடிவமைத்து கூறுகிறார்.
அதாவது நமக்கு முன்னதாக தோன்றிய தலைமுறையில் சென்று கொண்டிருந்தால் ஓர் அறிவு உயிரினத்திலிருந்து தான் நாம் வந்திருப்போம் என்று தெரியும். அது முதல் இன்று வரை பிறருக்கு செய்த பாவங்கள் பெற்ற சாபங்களாக மாறி நமது உடல் மையப்பகுதியில் கண்களுக்கும் கருவிகளுக்கும் தெரியாத பெட்டகத்தில் பதிவாகி உள்ளது. அது அவ்வவ்போது வியாதிகளாக வெளிவரும். ஒவ்வாமை தான் வியாதி என்றும் கூறுகிறார். ஹானிமேன் சொல்லிய க்ரானிக் டிசிசை சஹ்சித கர்மம் என்கிறார். அக்கியுட்டை பிரார்த்த கர்மம் என்கிறார். மியாசத்தின் வகையை சொல்லி, மருந்தை சொன்னவர் ஹானிமேன் அவரையும் விஹ்சிய கருத்தாக மகரிஷி இந்த இடத்தில் கூறியது என்னவென்றால் மியாசம் தோன்றியதையும் விதத்தையும் கூறி அதை தடுத்து கொள்ளுகின்ற வழியையும் கூறுகிறார். ஆகவே ஹானிமெனை மகரிஷி அவர்கள் இன்று விஹ்சிவிட்டார் என்பது தெரிகிறது அல்லவா?
83. ஒவ்வொரு நோயையும் தனிப்பட்ட முறையில் பரிசோதனை செய்யும் விஷயமாக நான் இங்கு பொதுவான வழிமுறைகளை தருகின்றேன். ஆதலால் தன்னிடம் வரும் பல கேசுகளில் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற வழிமுறைகளை வைத்தியர் வகுத்துக் கொள்ள வேண்டும். நோயைப் பற்றி முன்கூட்டியே ஒரு முடிவு கொள்வதை தவிர்த்து பகுத்தறிவைத் தீட்டிக்கூர்மையாக்கி நோயின் விவரங்களை அறிவதில் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே செலுத்தி அதன் உருவை அமைப்பதில் ஆழ்ந்த பற்றுக் கொள்ள வேண்டும். அவர் கடமையாதெனில் மிக நுணுக்கமாக நோயை பற்றி கேட்க வேண்டும்.
84. நோயினால் தான் படும் துன்பங்களின் வரலாற்றை நோயாளி விவரிக்கிறார். அவர் அருகே இருப்பவர்கள் நோயாளி தன் துன்பங்களைப் பற்றிக் கூறியது,அவன் நடந்து கொண்ட விதம், அவனிடம் கண்ட விஷயங்கள் ஆகியவைகளை உரைக்கின்றனர். வைத்தியர் நோயாளியைப் பார்க்கிறார். எல்லோரும் உரைத்த விவரங்களைக் கேட்கிறார் நோயாளியிடம் என்னென்ன மாறுதல்களும் வழக்கத்துக்கு மாறான விஷயங்களும் காணப்படுகின்றன என்பதைத் தன் மற்ற புலன்களால் மதிப்பிடுகிறார். நோயாளியும் அவருடைய நண்பர்களும் அவரிடம் கூறிய எல்லா விஷயங்களும் அவர்கள் கூறிய வண்ணமே ஓர் எழுத்தைக் கூட மாற்றாமல் சரியாக எழுதிக்கொள்கிறார். தான் மௌனமாய் இருந்து கொண்டு அவர்கள் சொல்லக்கூடிய எல்லா விஷயங்களையும் சொல்ல அனுமதிக்கிறார். சம்பந்தமில்லாத விஷயங்களுக்குத் தாவினாலொழிய அவர்கள் பேச்சில் குறுக்கிடமாட்டார். அவர்கள் சொல்லும் விவரங்களில் முக்கியப் பகுதிகளைக் குறித்துக் கொள்ள வசதியாய் இருக்க சோதனையின் துவக்கத்திலேயே மெதுவாக பேசும்படி அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
*உதாரணமாக, இடைமறித்துக் குறுக்குக் கேள்விகளை கேட்டால் அவர்கள் சொல்ல வந்த விசயங்களை மறந்து விடுவார்கள் அவ்வாறு மறந்துப்போன விசயங்களை பிறகு எவ்வளவு முயற்சித்தாலும் ஞாபகத்துக்குத் கொண்டு வர முடியாமல் போகலாம்.
85. நோயாளி அல்லது அவருடைய நண்பர்கள் குறிப்பிடும் ஒவ்வொரு புதிய சந்தர்ப்பத்தையும் (நோய்க்குறி) தனித்தனி வரிகளில் ஒன்றன் கீழ் ஒன்றாகப்பிரித்து இடையில் தாராளமாய் இடம் விட்டு எழுதி வரவேண்டும். அவ்வாறு செய்தால் முதலில் தெளிவற்ற முறையில் கூறப்பட்ட ஒரு விஷயம் பிறகு தெளிவாகச் சொல்லப்பட்டால் அதை உடனே ஏற்ற இடத்தில் குறித்துக் கொள்ள வசதியாய் இருக்கும்.
86. தாமாகவே சொல்லக் கூடிய (நோயின்) எல்லா விவரங்களையும் நோயாளியும் அவருடைய நண்பர்களும் கூறி முடித்த பின் வைத்தியர் அவர்கள் கூற்றிலிருந்து வெளிப்பட்ட முக்கியமான குறிகள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் பற்றிய திட்டமான விவரங்களைத் தெரிந்து கொள்ளப் பின் வரும் முறையைக் கையாள்கிறார். தன்னிடம் கூறப்பட்ட எல்லாக் குறிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துக்கொண்டு அவைகளைப் பற்றி மேலும் சில தகவல்களை விசாரிக்கிறார்.
உதாரணமாக, எந்தச் சமயத்தில் இந்தக்குறி தோன்றியது? இதுவரை அவர் உட்கொண்டு வந்துள்ள மருந்தைச் சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தோன்றியதா? அல்லது தற்போது மருந்தை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதுதான் தோன்றியதா? அல்லது மருந்து சாப்பிடுவதை நிறுத்திய சில நாட்களுக்குப் பிறகுதான் ஏற்பட்டதா? எந்த இடத்தில் ஏற்பட்டது அந்த வலியின் தன்மை என்ன? எவ்விதமான (உணர்ச்சி) வலி அல்லது வலி (உணர்ச்சி) குறிப்பாக எந்த இடத்தில் இருந்தது? வலி விட்டு விட்டும் தானாகவும் பல்வேறு சமயங்களிலும் தோன்றியதா? அல்லது இடைவெளிவிடாமல் தொடர்ச்சியாய் நீடித்திருந்ததா? எவ்வளவு காலம் அது நீடித்திருந்தது? இரவிலா? பகலிலா? எந்நேரத்தில் உடலை எவ்விதம் வைத்துக்கொண்டிருந்தால் வலி மிகக் கடுமையாய் இருந்தது, அல்லது முற்றிலும் மறைந்திருந்தது, ஒவ்வொரு குறியையும் அதன் திட்டமான தன்மையைக் குறித்து தெள்ளத் தெளிவாய்த் தெரிந்து கொள்ளவேண்டும்.
87. இவ்விதம் நோயின் ஒவ்வொரு குறியையும் பற்றிய திட்டமான விவரங்களை வைத்தியர் சேகரிக்கிறார். ஆனால் நோயாளி உண்டு அல்லது இல்லை என்பதுபோன்ற ஒரே வார்த்தையில் அவர் விடை தரக்கூடிய கேள்விகளை எச் சமயத்திலும் நீங்கள் கேட்க கூடாது (*உதாரணமாக இந்த அல்லது அந்த நோய்க்குறி இருந்ததா? என்று வைத்தியர் கேட்பது கூடாது. நோயாளி உண்மைக்கு மாறான விடையையும் தன் குறிகளைப்பற்றிய பொய்யான விளக்கத்தையும் தருவதற்கு இடம் அளித்தார் வைத்தியர் என்ற பழிச் சொல்லுக்கு ஒருபொழுதும் நீங்கள் ஆளாகக்கூடாது.) இல்லாவிட்டால் சோம்பல் காரணமாகவோ அல்லது வைத்தியரைத் திருப்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தாலோ உண்மைக்குச் சற்று மாறான அல்லது உண்மைக்கலப்பே இல்லாதவண்ணம் உண்டு அல்லது இல்லை என்று பதில் அளித்துவிடுவார். அதிலிருந்து நோயின் உண்மை உருவை உணர முடியாமலும் ஏற்ற சிகிச்சை முறையைக் கடைப்பிடிக்க முடியாமலும் போய்விடும்.
88. நோயாளியும் அவருடைய நண்பர்களும் சுயமாகவே கூறும் இவ்விவரங்களை உடலின் பல பகுதிகள், வேலைகள், மனக்குறிகள் ஆகியவைகளைப் பற்றி யாதொன்றும் குறிப்பிடப்படாமல் இருந்தால் வைத்தியர் அவ்விஷயமாக என்னென்ன விவரங்கள் இருக்கின்றன என்று கேட்கவேண்டும். அப்படிக் கேட்கப்படும் கேள்விகள் பொதுப்படையாகத்தான் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவைகளைப் பற்றிய முழு விவரங்களையும் அவர்கள் குறிப்பிடுவார்கள். உதாரணமாக, மலத்தின் தன்மை என்ன? எப்படி அவர் மூத்திரத்தைக் கழிக்கிறார்? பகலிலும் இரவிலும் தூக்கம் எப்படி இருக்கிறது? அவருடைய சுபாவம் கலகலவென்று பேசுதல்? ஞாபக சக்தி ஆகியவை எப்படி இருக்கிறது? தாகம் இருக்கிறதா? வாயின் சுவை எப்படி இருக்கிறது, எவ்வகையான உணவையும் பானங்களையும் அவர் மிக விரும்புகிறார். அவருக்கு எதன்மேல் வெறுப்பு இருக்கிறது.ஒவ்வொரு பொருளும் அதற்கு உரியதான சுவையுடன் இருப்பதாகத் தோன்றுகிறதா அல்லது மாறான சுவையுள்ளதாகத் தெரிகிறதா? உணவு அல்லது பானங்களை உட்கொண்ட பிறகு அவருக்கு ஏற்படும். உணர்ச்சிகள் என்னென்ன? தலை, கை கால்கள், அடிவயிறு ஆகியவைகளைப் பற்றிச் சொல்வதற்கு ஏதாவது விவரங்கள் இருக்கின்றனவா?
0 comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!