நோயின் உருவை உணரும் வழி :-
(6). ஒவ்வொரு நோயிலும் நோயாளியின் உடலிலும் மனதிலும் மாறுதல்கள் தோன்றுகின்றன. ஐம்புலன்களின் துணை கொண்டு வெளிப்படையாக அறியக்கூடிய இம்மாறுதல்களைத் தவிர வேறு எதையும் வைத்தியர் கவனிக்க வேண்டியதில்லை. முன்பிருந்த நோயற்ற நிலைக்கும் இப்பொழுது உள்ள நோயுற்ற நிலைக்கும் உள்ளமாறுதல்களைத்தான் வைத்தியர் கவனிக்க வேண்டும். இம்மாறுதல்களின் விவரங்களை நோயாளி, அவர் அருகில் இருப்போர் ஆகியோரின் வாக்கு மூலம் வைத்தியரின் கண்ணோட்டத்தின் மூலமும் அறியலாம். வெளிப்படையாகத் தெரியும், இக்குறிகள் எல்லாம் நோயின் முழு வடிவத்தை அதாவது உண்மையான உருவத்தை நமக்கு காட்டுகின்றன.
குறிப்பு:
வேறு விதமாக இன்றைய காலத்தில் நோய்களை கண்டுபிடிக்கப்படுவதற்காக பயன்படும் கருவிகள் ஓர் உண்மை ஹோமியோபதி மருத்துவருக்கு தேவையில்லை.
உயிர்ப்புச் சக்தியும் மொத்தக் குறிகளும் :
(7). ஒரு நோய் இருக்கிறது. அதை தூண்டிய காரணம் எதுவும் இல்லை. நீடிக்கச் செய்யும் காரணமும் இல்லை. நோய்க்குறிகளைத் தவிர வேறு எதுவுமே புலப்படவில்லை. மூவகை நச்சுத்தன்மைகளில் ஏதாவது இருக்கிறதோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. நோய் உண்டாக வேறு சில்லரைச் சந்தர்ப்பங்கள் ஏதாவது இருக்குமோ என்று தேடியதில் அவைகளும் இல்லை.
இந்நிலைமையில் நோயை நீக்கத் தக்க மருந்தைச் சுட்டிக்காட்டுவது நோயின் மொத்தக் குறிகளேயாகும். அக்குறிகளின் மூலமே ஏற்ற மருந்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உள்ளே இருக்கும் அதன் பண்பின் அளவை வலிகளின் மூலமாக வலிகளின் அளவுகளையும் எழுதி மொத்தக் குறிகளையும் தொகுத்து பகுத்து தக்கதொரு மருந்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு நோயிலும் இம்மொத்த குறிகளை அனுசரித்தே நோய் நீக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
(8). ஒவ்வொரு நோயிலும் வெளியிலே தென்பட்ட எல்லா நோய்குறிகளும் நீங்கிய பின் உடலினுள்ளே நோய் தங்கி இருக்கிறது என்றோ அல்லது நோயற்ற நிலையைத் தவிர வேறு ஏதோ ஒன்று இருக்கிறது என்று நினைக்கவும் முடியாது. யாராலும் இதை நிரூபிக்கவும் முடியாது.
மிக மிக நுட்பமான உயிர் சக்தியின் பணி என்னவென்றால் :-
(9). நமது பஞ்ச பூத உடலை இயக்குவது Spiritual Force என்று அழைக்கப்படும் ஜீவகாந்தம் ஆகும். இந்த ஜீவகாந்தமே உடலின் ஐந்து வித கருவிகளின் மூலமாக ஐந்து வித உணர்ச்சிகளாக அதாவது ஒளி, ஒலி, சுவை, மணம், ஊரு (தொடு உணர்வு) மற்றும் மனமாகவும் உடலை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இதனை உயிர்சக்தி என்று கூறலாம். இதனையும் பாதுகாக்கும் ஒரு சக்தி உண்டு. அதனை ஆங்கிலத்தில் Vital Force என்றும் தமிழில் உயிரை பாதுகாக்கும் சக்தி என்றும் இன்றைய காலத்தில் தெளிந்த முதிர்ந்த ஆன்மீக தந்தையான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வான்காந்தம் என்று கூறுகின்றார். உடல், உயிர், உயிர்ப்புச்சக்தி மூன்றும் இணைந்ததே ஒரு முழு மனிதனாகி இயங்கி பிறவியின் பயனை அனுபவித்து தன் கடமையை தீர்க்கிறான்.
(10). உடலையும் அதன் எல்லாவித இயக்கங்களையும், சுரப்பிகளையும், மூளையின் கட்டுப்பாட்டையும், ஐந்து வித உணர்ச்சிகளையும் கட்டுபடுத்தி இயக்கி கொண்டு வருவதையும் பிறவி தொடராக செய்த பாவங்களையும் பெற்ற சாபங்களையும் செய்த புண்ணியங்களையும் பதிவு செய்து வைத்து கொண்டு மேலும் இந்த பிறவியில் மட்டும் இல்லாமல் இதற்கு முன்னதாக பெற்ற பலப்பல பிறவிகளின் பாவ புண்ணியங்களையும் பதிவு செய்து வைத்து இருப்பது எது என்றால் இந்த உயிர் என்ற ஜீவகாந்தம் தான். இது உடலின் மையப்பகுதியில் கருமையம் என்ற ஒன்றை அமைத்து அதில் பதிவு செய்து வைத்து இருக்கிறது. இங்கு நமக்கு ஒரு சந்தேகம் எழலாம். பிறவி தொடர் என்றால் பல கோடான கோடி பதிவுகள் இருக்குமே இந்த சின்ன உடலில் இது நடைபெறுமாறு என்றும் சந்தேகம் எழலாம். ஆனால் நிழல் விண்கள் என்றவற்றில் இவைகள் பதிகின்றன. இதில் எத்தனை கோடி கோடி பதிவுகள் வேண்டுமானாலும் பதியும். ஆனால் அது பெருக்காது. கணமும் ஆகாது. கண்ணிலும் காண முடியாது. கருவிகளுக்கும் தெரியாது. இன்னும் எத்தனை இலட்சம் ஆண்டுகள் ஆனாலும் இதை கண்டுபிடித்து யாராலும் எப்போதும் காட்ட முடியாது. மற்றும் அதற்கு கருவிகளும் செய்ய முடியாது. ஆனால் இறைநிலை உணர்ந்த உண்மையான ஞானிகளால் மட்டுமே சொல்லவும் உணர்த்தவும் முடியும். இதனையும் பாதுகாக்கும் ஒரு சக்திக்கு பெயர் தான் வான்காந்தம் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகின்றார். இதை Vital Force என்று ஹானிமேன் கூறுகிறார். கண்களுக்கும் கருவிகளுக்கும் தெரியாத இந்த உயிர்ப்புச் சக்திதான் உடலின் இயக்கம் ஆகும். இது தடைப்பட்டால் மரணம் என்று ஹானிமேன் கூறுகிறார்.
இயற்கை மருத்துவ தந்தை Dr கூனே 400 வருடங்களுக்கு முன்பு தோன்றி அவர் கூறுவதாவது:- நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி நோயை குணப்படுத்தலாம் என்கிறார். அந்த தத்துவத்தில் உள்ள வித்தியாச கருத்துகளை கடைசி சுலோகத்தில் கூறுகிறார். பார்க்கவும். முதலடி படுவது உயிர்ப்புச் சக்தியே:-
(11). ஒருவர் நோய்வாய்பட்டால் முதலில் தாக்கப்படுவது அவரது உடலெங்கும் பரவி இயங்கும் உயிர்ப்புச் சக்தியே. உயிரைக் குடிக்கும் வல்லமையுள்ள ஏதோ ஒரு நோய்ப் பொருளால் தான் மிகநுட்பமான முறையில் இருக்கும் உயிர்ப்பு சக்தியில் கோளாறு அடைந்த உயிர்ப்புச் சக்தி வேதனையை அனுபவிக்கிறது. தான்அனுபவிக்கும் வேதனையை நோய் என்று (அதாவது) உடலில் நடைபெறும் வேலையை தாறுமாறாக்கி விடுகிறது. இப்படி தாறுமாறாக்கியபின்பு தான் நாம் அந்த மாற்றத்தை நோய் என்கிறோம். இப்படி செய்தது உயிர்ப்பு சக்திதான் என்பதை உணரவேண்டும். (அதற்கு உதாரணம்) கண்களுக்கு புலப்படாத உயிர்ப்பு சக்தியே தான் தன்னுடைய சக்தியை உடலின் மூலமே தானே காட்ட முடியும். ஆதலால், தான் அடைந்த (நோயை) எடுத்துக்காட்ட வைத்தியருக்கும் மற்றும் பார்ப்போருக்கும் எடுத்துக்காட்டும் விதத்தில் உடல் உறுப்புகளை தாக்கி அவ்வுறுப்புகளின் உணர்ச்சிகளிலும் வேலைகளிலும் மாறுதல்களை உண்டாக்குவது ஒன்றே உயிர்ப்பு சக்திக்கு உள்ள வழியாகிறது. வேறு எவ்வழியும் அதற்கு இல்லை.
குறிப்பு:
நோய் பொருளும் கண்களுக்கும் கருவிகளுக்கும் எப்போதும் தெரியாத ஒரு சக்தியே. அந்த சக்தி நுட்பமான உயிர்ப்புச் சக்தியைத் தான் தாக்கி குளறுபடி செய்கிறது. அதன் பின்புதான் உடலில் மாறுதல்கள் ஏற்படுகிறது. அந்த உடல் உறுப்பு மாற்றம் ஒரு கானல் நீர் போல் (மாயை). நோயின் மு்லம் அதுவல்ல. மறைபொருளாக இருக்கும் உயிர்சக்திதான், ஆனால் இன்றைய அலோபதி விஞ்ஞான கருவிகள் சோதனைகள் புறத்தோற்றம் தான், உடல் மாற்றம் தான் நோய் என்கிறது மேலும் அதுதான் நோயின் மூலம் என்று தப்பாக முடிவு செய்து தரும் மருந்துகளினால் குணம் முழுமையாகாமல் போவதற்கு அதுவே காரணமாகிறது.
(12). நச்சு பொருளால் பீடிக்கப்பட்ட உயிர்ப்புச்சக்தியே நோய்களாக உடலில் உண்டாக்குகிறது. அதனால் நோயாளியிடம் நம் புலன்களுக்கு தென்படும் நோய் குறிகள் உடலின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள மாறுதலை, அதாவது உயிர்ப்பு சக்தியில் கோளாறுகள் உள்ளதையும் எடுத்துக்காட்டுகின்றன. உண்மை மருத்துவர் குறிகளின் மூலம் நோயின் முழு உருவத்தை அறியலாமென்று ஒரே வார்த்தையில் சொல்லலாம். ஆதலால் நாம் செய்யும் சிகிச்கையினால் நோய்குறிகளும் உடல் வேலைகளில் ஏற்பட்ட தடைகளும் மறைந்து விட்டன என்றால் உயிப்புச் சக்தி ஒழுங்கு நிலைமையை அடைந்துவிட்டது என்றும் உடல் முழுவதிலும் ஆரோக்கிய நிலையை ஏற்படுத்தி விட்டது என்றும் நிச்சயமாக நம்பலாம்.
அலோபதியர்களின் அறியாத் தன்மை :-
(13). இன்றைய நிலையில் ஆங்கில முறை வைத்திய வல்லுநர்கள் குறிப்பிட்ட உடல் உறுப்புக்குள் தான் நோய் புகுந்து உறுப்புக்களை பெருக்க செய்துவிட்டது, வீங்க செய்து விட்டது என்று உருப்பெருக்கியின் மூலம் உருவத்தை கண்டு கொண்டு தன் வாழ்க்கை உயர்வு, பொருள், புகழ் பெற வேண்டும் என்பதற்காக நோயுற்ற உறுப்புகளை அறுத்து எடுத்துவிடுகின்றனர். ஆனால் உயிர், உடல், உயிரை (மனம்) உயிர்ப்பிக்கும் சக்தி ஆகியவை எதனுடனும் தொடர்பு கிடையாது. நோய் என்பது உடலுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறது என்று அலோபதி வைத்தியர்கள் நினைக்கின்றனர். இது மிக மிகக் தவறானது. கண்ணால் கண்டதே மெய், மற்றதெல்லாம் பொய் என்று கருதும் உள்ளப்பாங்கு உள்ளவர்களாலேயே அவ்விதம் நினைக்க முடியும். அத்தகையவர்களால் தான் அலோபதி வைத்திய முறை இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பாழடிக்கப்பட்டு இன்று தீமை நிறைந்த வைத்தியமுறையாகிவிட்டது.
எல்லை இல்லாதது இறைவனின் அன்பும் கருணையும் .
வான்காந்தமும், ஜீவவகாந்தமும்
(14). குறிகளின் மூலம் தன்னைக் காண்பித்துக் கொள்ளாத நோயோ, கோளாறோ, மனித உடலில் இல்லை. அதாவது குணமாக்கப்படக் கூடிய எல்லா நோய்களும், கோளாறுகளும், குறிகளின் மூலம் கூர்ந்து கவனிக்கும் வைத்தியருக்குத் தம்மை குறிகளாக வெளிபடுத்திக் கொள்கின்றன. எல்லாம் வல்ல இறைவனின் எல்லையில்லாப் பெருங்கருணையே இதற்கு காரணம்.
குறிப்பு:
ஒருவருக்கு விதி முடிகிறது என்றால் சரியான குறியை இயற்கை காட்டாது இதுவே இயற்கையின் நியதியாகும். உயிரும் உடலும் ஒன்றே ஆகும்.
(15). உடல்; முழுக்க நிறைந்து இருப்பது ஜீவகாந்தம். அதற்கு சக்தியை கொடுப்பது வான்காந்தம்.
இந்த மிக நுட்பமான ஜீவகாந்தத்தை பிடித்துள்ளதும் கண்களுக்கும் கருவிகளுக்கும் தெரியாத ஒரு நச்சு சக்தியே ஆகும். பெற்ற சாபமும் செய்த பாவமும்தான் நச்சு (அ) பாவப்பதிவு என்றும், பிறவி தொடருக்கும் இதுவேதான் காரணம் என்று கீதையிலும் சொல்லப்படுகிறது, வேதாத்திரி மகரிஷியும் இதையேதான் தெளிவாக கூறுகிறார்.
“வான்காந்தம் ஜீவகாந்தத்தை உருவாக்கி பாதுகாக்கிறது.
ஜீவகாந்தம் பரு உடலை இயக்குகிறது.
குழப்பம் இல்லாமல் எளிதில் புரிந்து கொள்வதற்காகவே ஒவ்வொரு பொருளை இரண்டாகப் பிரிக்கிறோம்.
மிக நுட்பமாகவே நடைபெறும் வேலை.
(16). நம் உயிர்ப்புச் சக்தி நுட்பமான ஒரு பொருள். ஆதலால் உயிருக்கு தீங்கிழைக்கும் நோய்ப்பொருள்கள் நுட்பமான வழியில் தான் அதை தாக்கவோ, பிடிக்கவோ முடியும். இதைப் போலவே நோய்க்கு ஏற்றதான மருந்துகளிலுள்ள நுட்பமான சக்தியினால் தான் நோய்ப் பொருள்களை நீக்கவும் முடியும். நோயாளியின் ஆரோக்கிய நிலைமையில் ஏற்பட்டு உள்ள மாறுதல்களைக் கவனமாய் ஆராய்ந்து அதற்கேற்பக் கொடுக்கப்படும் மருந்துகளிலுள்ள நுட்பச் சக்தியை உடலெங்கும் பரவி நிற்கும் உணர்ச்சிமிக்க ஜீவகாந்தத்தின் மூலம் உயிர்ப்புச் சக்தி கிரகித்துக் கொள்கிறது. அவ்வாறு கிரகிக்கப்படும் மருந்து சக்தியினாலேயே தான் ஆரோக்கியநிலைமை திரும்ப ஏற்படக்கூடும். ஏற்படவும் செய்கிறது. சிகிக்சையின் நோக்கம் நோய்க்குறிகளை நீக்குவதேயாகும் :-
(17). ஐம்புலன்களாலும் அறியப்பட்ட எல்லா நோய்க்குறிகளும் நீங்கிக் குணம் ஏற்படும் போது அக்குறிகள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த நச்சு சக்தியானது அது உண்டாக்கிய நோய்க்குறிகளால் தான் நோய் போக்கப்படுகிறது. உடலின் வெளிப்புறத்தே தென்படும் நோய்க்குறிகளை நீக்கினால் போதும், என்பது இப்பொழுது விளங்கும்.
குறிப்பு:
திருக்குறள் கூறுவதாவது
நோய்நாடி நோய் முதல் நாடி அதை தணிக்க
வாய்நாடி வாய்ப்ப செயல்.
விளக்கம்:
1. நோய் என்னவென்று தெரிந்து கொள்ளவேண்டும்.
2. நோயின் அடிப்படை காரணமும் நீடிக்க செய்கின்ற காரணமும் தெரிந்து கொள்ளவும்.
3. குணப்படுத்துவதற்காக நோயாளியின் மற்றும் மருத்துவரின் வாய்வழியாகவே செய்திகளை அறிந்து கொள்ளவும்.
4. பின்பு தக்க மருந்தும், உணவும், சாப்பிடும் அளவும், முறையும், காலமும் முறையாக்கப்பட வேண்டும் என்கிறார் .
நிறைய விடயம் நண்பரே நல்ல தகவல்கள்.
ReplyDeleteஹோமியோமியோபதி மருத்துவத்தை உருவாக்கிய மரு. ஹானிமன் எவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்தறிந்து செயல்பட்டிருக்கின்றார் என்பதனை ஆர்கனான் தொடரில் அறியலாம் நண்பரே! அவசியம் தொடருங்கள்! ஹோமியோபதி ஒரு உன்னத மருத்துவம் என்பதை உணர்வீர்கள்! நன்றி தங்கள் கருத்துரைக்கு!
Delete