இன்று உலகில் அதிகம் பரவியிருக்கும் அலோபதி மருத்துவ முறை இந்த நான்கையும் கடைபிடிக்கிறதா?
வாதம், பித்தம், சிலோத்துமம் தான் அடிப்படை காரணம் என்கிறதே சித்தா அதில் மனக்குறி போகுமா?
நோய்களின் குறிகளே மருந்தை காட்டும்:-
(18). நோய்களில் அவைகளின் மொத்தக் குறிகளைத் தவிர வேறு எதையும் எவ்வழியினாலும் கண்டுபிடிக்க முடியாது என்பதை மேலுள்ள சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை நமக்குப் போதிக்கிறது. ஆகவே ஒவ்வொரு நோய்க்கும் ஏற்ற மருந்தை தேர்தெடுக்க நமக்கு வழிகாட்டியாய் ஆதாரமாய் இருக்க வேண்டியது அதன் மொத்தக் குறிகளே என்பது மறுக்க முடியாத விஷயம் ஆகிறது. குறிப்பு ஆகவே உடலையும், உறுப்புகளையும், இரத்தம், பித்தம் போன்ற நீர் பொருட்களையும் காண உருப்பெருக்கி திரைகளும், கருவிகளும் வைத்துக் கொண்டு உறுப்புகளை மட்டுமே அறுத்து எடுத்து சரிசெய்யும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மருந்தில் உள்ள நுட்பமான சக்தி :-
(19). ஒருவரின் ஆரோக்கிய நிலைமையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களே நோய் என்று அழைக்கப்படுகின்றன. அம்மாறுதல்கள் நோய் குறிகளாகத் தோற்றமளிக்கின்றன. நோய்க்குறிகள் நீங்கி? ஆரோக்கிய நிலைமை மீண்டும் திரும்பினால் தான் நோய் குணமடைவது நிரந்தரமாகும். ஆகவே மருந்துகளுக்கு மனித உடலின் ஆரோக்கிய நிலைமையை மாற்றும் சக்தி இல்லாவிட்டால் அவைகளால் நோய்களை நீக்க முடியாது என்பது இதிலிருந்து தெளிவாகும். ஆரோக்கிய நிலைமையை மாற்றும் (அதாவது கெடுக்கும்) சக்தியைப் பெற்றிருக்கும் ஒரே காரணத்தினால் தான் மருந்துகளுக்கு நோய்த்தீர்க்கும் சக்தி இருக்கிறதென்றும் கூறலாம்.
(20). மனிதனின் ஆரோக்கிய நிலையை மாற்றவும் அதே சமயம் நோய்களை தீர்க்கவும் வல்லமையுள்ள சக்தி மருந்துகளினுள்ளே மறைந்து இருக்கிறது. பகுத்தறிவின் துணை கொண்டு அதை கண்டுபிடிக்க எக்காலத்திலும் முடியாது. மனிதனின் ஆரோக்கிய நிலைமையில் ஏற்படுத்தும் மாறுதல்களை அனுபவ வாயிலாகப் பார்த்தே தெளிவாக அறிய முடியும். ஆகவே மருந்தில் இருக்கும் நோய் தீர்க்கும் சக்தியை எப்போதும் யாராலும் கருவிகளை கொண்டு நிருபித்து காட்ட முடியாது.
குறிப்பு -1
வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி கடவுளை நீங்கள் காட்டமுடியுமா? இதுவரை கூறிய ஆன்மீகவாதிகள் கூறுகின்ற கருத்து குழப்பமாகவே இருக்கிறதே என்று மகரிஷியை கேட்டார்கள்.
மகரிஷியின் பதில்:
கடவுளை காண்பது மிக மிக எளிதானது. சுருக்கமாக கூறினால் கடவுளை காணபதற்கு வேறு எங்கும் போக தேவையில்லை. நமது உடலில் ஐந்து வித பௌதிகமாக இருந்து கொண்டு இயங்குகிறது அல்லவா? (மண், நீர், நெருப்பு, காற்று, விண் என்று) அதாவது
1. மண் என்ற தத்துவம் நமது உடலில் கெட்டிப் பொருளாக இருக்கிறது. அதிலிருந்து ஓர் உணர்வு தொடு உணர்வாகவும் அல்லது அழுத்தமாகவும் உணர்கிறோம் அந்த ஓர் ஆற்றல் தான் கடவுள்.
2. நீர் நமது உடலில் பித்தமாக, ரசமாக, இரத்தமாக நீர் பொருளாக இயங்குகிறது. ஒவ்வொரு வித ஆற்றலாகிறதே அது தான் கடவுள்.
3. நெருப்பு என்பது நமது உடம்பில் எப்போதும் உடல் வெப்பம் 98ு அளவாகவும் இருந்து கொண்டு உடலை இயக்குகிறது அல்லவா? அந்த ஓர் ஆற்றல் தான் கடவுள்.
4. காற்று உடலுக்கு தேவை. 10 விதமான வாயுகளாக மாறி உடலை நடத்துகிறது அல்லவா? அந்த ஓர் ஆற்றல் தான் கடவுள்.
5. விண் உடலில் மனமாகவும் அதுவே அறிவாகவும் செயல்படுகிறது, அந்த ஓர் ஆற்றல் தான் கடவுள் என்கிறார்.
மேலே கண்ட 5-வித பௌதிக பிரிவில் ஒழுங்காக இயங்கிகொண்டு இருக்கிறது. இவ்வாறு இயக்குவது தான் கடவுள். இந்த இயக்கத்தை வித்தியாசப்படுத்தி ஏற்றவும், தாழ்த்தவும் மாற்றியும் காட்டி சமன் செய்து கொள்கிறதே அதுதான் கடவுள். அதை உணரதான் முடியும். கற்சிலை, பொற்சிலை போல் காட்ட முடியாது. எல்லா உடலிலும், எல்லா பொருளிலும் தன்மைக்கு ஏற்ப இயங்கி வெளிபடுவதே அதை காந்தம் என்று சுருக்கமாக சொல்லலாம். எந்த வித கருவிகளுக்கும் கூட தெரியாத ஒரு ஆற்றல்தான் காந்தம். காந்ததத்தை தான் கடவுள் என்கிறார். அந்த காந்தத்தை இரு கூறுகளாக பிரித்து உயிருள்ள உடலில் இயங்கும் போது அதை ஜீவகாந்தம் என்றும், அதையும் பாதுகாத்து இயக்குகின்ற மற்றவற்றை வான்காந்தம் என்கிறார்.
குறிப்பு-2
ஒவ்வொரு மருந்திலும் இரண்டு குணம் உள்ளது. ஒன்று அமிர்தம். மற்றொன்று நச்சு. ஒவ்வொரு பொருளிலும் இரண்டு பண்புகள் உள்ளது. ஒன்று நன்மை செய்வது மற்றொன்று தீமை செய்வது.
உதாரணம்,
எட்டிக்காயை பச்சையாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்பட்டு மரணம் அடைந்து விடுவார். அதை ஹோமியோபதி முறைப்படி வீரியமாக்கி கடுமையான வயிற்று வலிக்கு தரும்போது மரணத்தை ஏற்படுத்தும் எட்டிக்காய் நச்சு இப்போது அதே வயிற்று வலிக்கு மருந்தாக பயன்படுகிறது. இதே நச்சு தான் இப்போது அமிர்தமாகிறது. இது போல எல்லா தாவரங்களிலும் இது போல் நச்சும் ஹோமியோபதி மருத்துவ முறையால்) அமிர்தமுமாகிறது. ஹோமியோபதி முறைப்படி வீரியப்படுத்தும் போது(Potency) அவைகள் அமிர்தாமகின்றன. இதேபோல் இரும்பில் செய்த கத்தி, காய்கறிகள், பழங்கள், விறகு போன்ற பலப்பல பொருட்களை வெட்ட பயன்படுகிறது. இது நன்மை. தன்னையோ பிறரையோ வெட்டப் பயன்படுத்தும் போது உயிரை போக்கும் நசசாக அதுவே மாறிவிடுகிறது.
இதே போல் ஒரு மனிதனை பிறவி தொடரும் சந்தர்ப்ப சூழ்நிலை வசதி வாய்ப்புகள் நல்லவனாகவும் (அமிர்தம்), இதே சமுதாய அமைப்பு கெட்டவனாக்கி (விஷம்) விடுகிறது. தாவரமும், மனிதனும், உலோகமும் ஒன்றுதான். ஆனால் அவற்றுள் இருவித நன்மை தீமை செய்யும் பண்புகள் உள்ளன. ஆகவே திட, திரவ, வாயு ஆகிய மூன்று பொருட்களிலும் இரண்டு இரண்டு பண்புகள் இருக்கிறது. பக்குவப்படுவதிலும், பயன்படுத்துவதிலும், சமுதாயத்தின் இன்ப துன்பத்தில் பயிற்சி பெறுவதிலுமே வித்தியாசப்படுகிறது.
இப்படி ஆயிரமாயிரம் விஷயங்களில் உள்ளதை பார்த்து தெரிந்து தெளிந்து கொள்ளுவோம். ஓரே பொருளில் உணவும், மருந்தும், அமிர்தமும், நஞ்சும், நன்மையும், தீமையும் உள்ளது. அதன் மாற்றமும் காலமும் பயன்படுத்துவதில் உள்ள மாறுதல்களை பொருத்து மாறுகிறது.
இதிகாச கதைகள் கூறுவதாவது:
அதாவது நேர்மையாக வாழ்ந்து அரச பதவியிலும் அப்படியே வாழ்ந்தால் பக்தி செய்து தியானம் செய்து ராஜசூயம் யாகம் நடத்தினால் தேவராகலாம். பின்பு தேவேந்திரன் ஆகலாம். (மேல் உலகம் தூய இடம்) தேவன்+வேந்தன் தேவருக்கே அரசன் ஆகலாம். குற்றம் பாவம் செய்யும் அதே அரசன் பாவி ஆகி நரகம்(பாதாளம்) அரக்கர்கள் வாழுகின்ற இடத்துக்கு போய்விட வேண்டும் என்று கூறுகிறது.இதே இடத்தில்
வள்ளலார் கூறுவதாவது:-
திரும்ப திரும்ப புண்ணாக்குவது அவனது மனமே (நோய்) என்று வள்ளலார் கூறுகிறார். அதே போல் மருந்தை பற்றி கூறும் போது, மருந்தோ மருந்து அருமருந்து, மனமே மருந்து, அதில் உள்ள நற்பண்புகளே மருந்து (அமிர்தம்) என்றும் கூறுகிறார். இதே இடத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது) “குற்றவாளி, பாவி என்றும் ஞானி என்றும் யாரும் இல்லை உலகிலே, குற்றத்திற்கு காரணமோ இந்த பழைய சமுதாய அமைப்பே” - என்கிறார்.
மருந்து சக்தியை மதிப்பிடும் வழி :-
(21). மருந்துகளிலுள்ள நோய் நீக்கும் சக்தி வெளிப்படையாய் தெரியவில்லை. மருந்துகளைச் சோதனை செய்யும் காலத்தில் அவைகளால் மனித உடலின் ஆரோக்கிய நிலைமையில் ஏற்படுத்தப்படும் மாறுதல்களையும், பற்பல வகைப்பட்ட நோய் குறிகளையும் தவிர அவைகள் நோய்களை தீர்க்கப் பயன்படும் என்பதற்கான அடையாளங்கள் ஒன்று கூட எவ்வளவு முயற்சி செய்தாலும் தென்படவில்லை. மருந்துகள் நோய்களை தீர்க்க உபயோகமாகின்றன என்றால் ஆரோக்கியமான நிலைமையில் மாற்றத்ததை (அதாவது) வியாதியின் குறிகளை உண்டு பன்னும் சக்தி அதற்கு இருக்கிறது என்று நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஆகவே மருந்துகளிலுள்ள நோய் தீர்க்கும் சக்தியை ஆரோக்கிய நிலைமையில் அது செய்யும் நோய் குறிகளை கொண்டே நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு மருந்தும் எந்த எந்த நோய்களை உண்டாக்கும். அதே சமயம் நோய் தீர்க்கும் சக்தியையும் பெற்று இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும். ஒற்றுமையும் வேற்றுமையும்.
(22). நோய்களில் நோய்களின் குறிகளைத் தவிர நீக்கப்படவேண்டிய பொருள் வேறொன்றும் தென்படவில்லை. அதே போல் ஆரோக்கியமாயுள்ள உடலில் செயற்கை நோய் குறிகளை ஏற்படுத்தவும் நோயுற்றோரின் உடலில் நோய் குறிகளை நீக்கவும் ஆன இருவகைச் சக்திகளை தவிர வேறு எதுவும் மருந்துகளில் காணப்படவில்லை. இதிலிருந்து நமக்கு இரண்டு விசயங்கள் தெரிய வருகின்றன.
முதலாவது: ஒருவிதமான செயற்கை நோயை உண்டாக்கவும் ஏற்கனவே இருந்த நோய் குறிகளை (குணம் செய்யவேண்டும் என்று நாம் நினைத்த நோயை) நீக்கவும் மருந்துகளுக்கு சக்தி இருப்பதால்தான் அவை நோய்களை நீக்குகின்றன.
இரண்டாவது: குணம் செய்யப்பட வேண்டிய நோயின் மொத்த குறிகளை நீக்க அக்குறிகளுடன் ஒற்றுமையோ அல்லது வேற்றுமையோ உள்ள செயற்கை நோய்க்குறிகளை உண்டாக்கும்சக்தியுள்ள மருந்தை தேட வேண்டும்.
குறிப்பு:
மருந்தை மனித உடலில் தந்து மருந்து நிரூபணம் செய்வதற்கு என்று உலகில் ஒரு மருந்தை தேடி எடுத்து தந்து நிரூபணம் செய்யும் போது என்ன மாதிரி குறிகள் வருமோ, அதே மாதிரி குறிகளோடு உள்ள நோயாளிக்கு தரும்போது நோய் குறி போய்விடும். பின்பு நோயும் போய்விடும். வேற்றுமை மருந்து வேதனை தரும்.
(23). வேற்றுமை மருந்துகளை கொடுத்தால் பிடிவாத குணமுள்ளஇயற்கை நோய் குணமாகி விட்டது போலச் சிறிது நேரத்துக்கு தோற்றமளித்து பிறகு முன்னை விட கடுமையான அளவில் திரும்பி வந்து விடுகிறது. சரியான முறையில் நடத்த பட்ட ஆராய்ச்சியும் தூய்மையான அனுபவமும் இது உண்மைதான் என்று உறுதி செய்கிறது. குறிப்பு: வேற்றுமை என்பது உறுப்புகளின் தடைகளை வியாதியை நீக்கும் படி செய்து வியாதியை போக்குவது. அதாவது அலோபதி முறைப்படி செய்யும் மருந்துகள் என்றும், வேறு உறுப்பை நோயை பார்த்து தருவதை குறிக்கும். ஒற்றுமை மருந்தே வேதனையை ஒழிக்கும்.
(24). வேற்றுமை மருந்துகளால் வேண்டிய பலன் விளையாது என்பது இப்பொழுது விளங்கி விட்டது. ஆகவே ஒற்றுமை குணமுடைய ஹோமியோபதி முறை மருந்துகளை தவிர உலகின் வேறு வழியில்லை. மருந்து சோதனை நடத்தப்பட்ட போது நோயற்ற உடலில் ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு விதமான செயற்கை நோய்குறிகளை உண்டாக்குகிறது. அம்மருந்துகளில் சிகிச்சைக்கு வந்துள்ள நோயாளியின்(Totality)மொத்தக்குறிகளுடன் மிக நெருங்கிய ஒற்றுமையுள்ள செயற்கை (மருந்து) நோய் குறிகளை உண்டாக்கியது எது என்று ஆராய்ந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மருந்து தான் நோயை தீர்க்க நமக்கு இருக்கும் ஒரே வழியாகும்.
(25). அம்மருந்து தகுந்த வீரியத்தில் கொடுக்கப்பட்டால் நோயின் மொத்தக்குறிகளும் விரைவில் நீங்கி ஒழுங்காய் வேரோடு அவைகளை வீழ்தப்படுகின்றன. அதாவது நோய் முழுவதும் நீங்கி நோயற்ற நிலைக்கு உடலை மீட்கப்படுகிறது. இதை போலவே செயற்கை நோய்குறிகளை நோயற்ற உடலில் உண்டாக்கும் மருந்துகள் யாவும் ஒற்றுமையுள்ள இயற்கை நோய்களை குறிகளை மிச்சம் மீதி வைக்காமல் முழுவதையும் போக்கி விடுகிறது. இதில் விதி விலக்கு ஏதுமில்லை. இயற்கையோடு ஒட்டியது ஹோமியோபதி சட்டமே இதற்கு காரணம். அக்காரணத்தை முற்றும் உணர்நதவர் ஒருவரும் இதுவரை இல்லை. இருளில் இருந்த இயற்கையின் மருத்துவ சட்டம் இதுவே.
(26). உயிருள்ள ஒரு உடலில் சூட்சும (மறைமுகமான) உருவில் இருக்கும் ஓர் இயற்கை நோய் பொருள், அதனினும் வலிமை மிகுந்த இனத்தால் மாறுபட்டாலும் அதன் செயலிலே ஒற்றுமையுள்ள மற்றொரு சூட்சும பொருளால் நிரந்தரமாய் அழிக்கப்படுகிறது. குறிப்பு: தாவரமோ உலோகமோ ரசாயனமோ இப்படி உலகில் எதிலிருந்து மருந்து எடுத்து மனித உடலில் சோதனை செய்து பார்க்கும் போது கிடைக்கும் குறியே தான் தக்க நோயிக்கு தரும் போது நோய்குறிகளை போக்கிவிடும்.
(27). இயற்கை நோய்குறிகளுடன் ஒற்றுமையாய் இருப்பதுடன் அவைகளை விட அதிகமான வலிமையும் பெற்றிருப்பதாலேயே மருந்துகளுக்கு நோய் தீர்க்கும் சக்தி ஏற்பட்டிருக்கிறது. ஆதலால் இயற்கை நோய்க்குறிகளுடன் மிக நெருங்கிய ஒற்றுமையாய் உள்ள செயற்கை நோய்க்குறிகளை (நோயற்ற மனித உடலில்) உண்டாக்கும் இயல்பும் அவ்வியற்கை நோய்களை விட அதிக வலிமை பெற்று இருப்பதாலேயே ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு இயற்கை நோயை நிச்சயமாகவும் ஒழுங்காகவும் விரைவிலும் வேரோடும் வீழ்த்தும் என்பதை நாம் பார்க்கிறோம்.
(28). உலகில் உண்மையாக நடத்தப்படும் சோதனைகளிலும், ஆராய்ச்சிகளிலும் இவ்வகையான நோய் தீர்க்கும் சட்டம் வெளிப்படுவதால் அதன் உண்மை நமக்கு நிருபணம் ஆகிறது. எவ்விதம் நோய் தீர்க்கப்படுகிறது என்பதை அறிவியல் மற்றும் விஞ்ஞான விளக்கங்கள் நமக்கு தேவையில்லை. அதை பற்றி நமக்கு கவலையும் இல்லை. ஆயினும் கீழேயுள்ள விளக்கம் அனேகமாக சரியாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
குறிப்பு:
Dr. சாமுவேல் ஹானிமேன் அவர்கள் இன்றைய மருத்துவ அறிவியலில் உள்ள உடற்கூறு- மாறுபட்ட தேக கூறு அடிப்படையில் கிருமிகள், வியாதிகள் என்று கண்டு முயல், வெள்ளெலி போன்ற பாலூட்டிகளுக்கு அலோபதி மருந்துகள் கொடுத்து நிருபணம் செய்யப்படுகிறது அல்லவா அதைத்தான் அடியோடு வெறுக்கிறார். மேலும் மனித சோதனை செய்ய மனித உடம்பில் சோதிக்கும் போது அவர்கள் கூறும் கஷ்டங்களின் வெளிப்பாட்டை தான் குறி என்கிறார். பலரிடம் ஒரு மருந்தை தந்து சோதிக்கப்பட்டு பலரிடமும் வந்த ஒரே மாதிரியான (அடையாளம்) குறியை தான் மெடீரியா மெடிகாவில் (மருந்துகளின் குணப்பாடத்தில்) த்தில் உள்ளது அதை கொடுத்தால் குறி போய்விடும். பின்பு நோயும் போய்விடும். அதை விட்டு வியாதி பெயரை கிருமி பெயரை உறுப்பு மாற்றத்தை வைத்து இன்றைக்கு செய்யப்படுகிற சிகிச்சையும், மருந்தும் செய்கின்ற மிரட்டல்களும் பிதற்றல் என்கிறார்.
(29). நம் உயிர்ப்பு சக்தியின் உணர்ச்சிகளிலும் வேலைகளிலும் ஏற்படும் மாறுதல்களே நோயின் அடிப்படையாகின்றன. இயற்கை நோய் ஒன்றால் உயிர்ப்பு சக்தி பீடிக்கப்பட்டிருக்கும் போது அந்நோயின் குறிகளுடன் மிகவும் ஒற்றுமையுள்ள ஒரு மருந்தை தேர்வு செய்து கொடுத்தால் அச்சமயத்தில் என்ன நடக்கிறது, முதலில் பலவீனமான இயற்கை நோயை துரத்திவிட்டு அதற்கு பதிலாக அதை விட வலிமையுள்ள செயற்கை நோய் பொருள் (மருந்தில் உள்ள சூட்சும சக்தி) உயிர்ப்பு சக்தியை பீடிக்க ஆரம்பிக்கிறது.அதனால் உயிர்பு சக்தி துள்ளி எழுந்து தன் முழு வலிமையும் உபயோகித்து வேலை செய்யும் அவசியம் அதற்கு ஏற்படுகிறது. அதனாலும் மருந்தின் சூட்சும சக்தி சிறிது நேரமே தங்கி இருக்க முடியுமாதலாலும், முதலில் இயற்கை நோயின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட உயிர்பு சக்தி அடுத்த படியாகச் செயற்கை நோயிலிருந்து விடுபட்டு உடலின் வேலைகளை முன்புபோலவே ஒழுங்காக நடத்த ஆரம்பிக்கிறது. இதை விடச்சரியானது வேறில்லை என்று கூறத்தக்க இவ்விளக்கம் கீழுள்ளஉண்மைகளை ஆதாரமாய் கொண்டிருக்கிறது.
எவ்வளவு தகவல்கள் ஆச்சர்யமாக இருக்கிறது நண்பரே பயனுள்ளவை தொடர்கிறேன்
ReplyDeleteதங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே!
Delete